விளையாட்டு

சிஎஸ்கே வை கலாய்க்கும் நெட்டிசன்கள் தனிமனித இடைவெளி மற்றும் மாஸ்க் எங்கே?

சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஐபிஎல் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே அதாவது ஆகஸ்ட் மாதமே துபாய் புறப்படும் என கூறப்படுகின்றன. இந்நிலையில் விமானத்தினுள்ளே தோனி உள்ளிட்ட 6 சிஎஸ்கே வீரர்கள் மாஸ்க்கை அணியாமலும் தனிமனித இடைவெளி இல்லாமலும் அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்கள்.

இந்தக் குழு புகைப்படம் பெரும் சர்ச்சையாகி வருகிறது. தோனியை பொருத்தவரை அவர் ராஞ்சி விமான நிலையம் தொடங்கி சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் புகைப்படங்களில் மாஸ்க் அணிந்து காணப்பட்டார். குழுவாக இருக்கும் புகைப்படங்களிலும் சுரேஷ் ரெய்னா எடுத்த செல்ஃபி புகைப்படங்களிலும் அவர் மாஸ்க் அணிய வில்லை.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அருமையான “தனிமனித இடைவெளி” எங்கே பாஸ். ‘தனிமனித இடைவெளி கிலோ என்ன விலை’ என கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து புறப்பட்ட தோனி நேற்று மாலை சென்னை வந்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா, தீபக் சஹர், பியூஸ் சாவ்லா, மோனு குமார் சென்னையில் ஒரு வாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர். இவர் நேற்று சென்னை வந்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

தோனி உள்ளிட்ட 6 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஐபிஎல் பயிற்சிக்காக விமானம் மூலம் சென்னை வந்தனர். அப்போது விமானத்தில் குழுவாக அமர்ந்தபடி புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் யாரும் மாஸ்க் அணிய வில்லை. தனிமனித இடைவெளியும் இல்லை என்பதால் இது சர்ச்சையாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *