ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்வாழ்க்கை முறை

குலதெய்வம் உங்கள் வீட்டில் குடியேற

ஒரு குடும்பம் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அந்த குடும்பத்தின் மீது தெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே அவர்கள் நன்றாக வாழ முடியும். ஒரு வீடு ஒன்று இருந்தால் அதில் என்ன இருக்கிறது இல்லையோ குலதெய்வத்தின் அருள் முக்கியமாக இருக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் நாகரிகம் பெருகப் பெருக பல பேரும் தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமல் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளனர். ஒரு குலத்தின் பெருமை குலதெய்வம் அவர்களுடன் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் குலத்தை வளமாக வாழ வைக்கவும் வாழையடி வாழையாக குடும்பம் செல்வ செழிப்புடனும் சொந்த பந்தங்களுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் குலதெய்வம் இருக்க வேண்டும்.

ஒரு வீட்டில் உள்ள பெண் தினமும் பூஜை செய்யும்பொழுது அவர்களின் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து வணங்கினாலே நன்மை தரும். இவ்வாறு குலதெய்வத்தின் பெருமைகளை நீங்களும் தெரிந்துகொண்டு உங்கள் குலதெய்வத்தின் பெயர் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை மனதார குலதெய்வமே என்று எங்கள் குலத்தை காக்க வேண்டும் என்று கூறினாலே உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு உங்கள் குலதெய்வம் உங்களுடன் குடிகொண்டு உங்களுக்கு பரிபூரண அருளை தருவாள்.

குலதெய்வத்தை மனதார நினைத்து பிராத்தித்தாலே அவரின் அருள் பரிபூரணமாக உங்களை வந்து சேரும். இது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் உங்கள் குலதெய்வம் உங்களுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் அதுவும் நடக்கும் நீங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது உங்கள் குலதெய்வத்தாயை நேரில் சென்று தரிசித்து வரவேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அனைவரின் கையாலும் உங்கள் குலதெய்வ கோவில் இருக்கும் மண்ணை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.

மேலும் படிக்க : செல்வம் செழிக்க எக்காரணம் கொண்டும் இதை செய்ய மறவாதீர்கள்….

அவ்வாறு எடுத்து வந்த மண்ணை அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்து குளித்து சுத்த பத்தமாக இருக்கும் பொழுது பூஜை அறைக்கு சென்று அந்த மண் முடிச்சை அவிழ்க்க வேண்டும் அதை சிறிது மஞ்சள் தண்ணீரை தெளித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பல பேரின் காலடிகளும் அந்த மண்ணில் பட்டுள்ளதால் மஞ்சள் தண்ணீரை தெளித்தால் அதில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்க சுத்தமான மண்ணாக மாறிவிடும். இவ்வாறு மாறிய மண்ணில் ஏலக்காய் 2, கிராம்பு இரண்டு ,வெட்டிவேர் சிறு துண்டு ,தர்பைப் புல் சிறிதளவு, பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வாசப்படி நிலவில் கட்டி விடுங்கள்.

இல்லை என்றால் பூஜை அறையிலேயே ஒரு கிண்ணத்தில் வைத்து தினமும் அதற்கு சாம்பிராணி தூபம் காட்டி பூஜை செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு ஏதேனும் தீராத கஷ்டம் வரும் பொழுது அந்த மண்ணை எடுத்து உங்கள் நெற்றியில் வைத்து குலதெய்வத்தாயை பிரார்த்தனை செய்தால் உங்களின் கஷ்டங்கள் ஓடோடி விடும் .குடும்பத்தில் எந்த சுப காரியங்கள் நடக்கும் பொழுதும் அந்த மண்ணை எடுத்து உங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு நீங்கள் செய்தால் உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் எப்பொழுதும் குடியிருப்பாள் நீங்கள் மன மகிழ்ச்சியுடன் குடும்ப உறுப்பினர்களுடன் ஒற்றுமையாக செல்வ செழிப்புடன் வாழலாம் என்றென்றும் சுப காரியங்கள் உங்களை தேடி வரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *