செய்திகள்தமிழகம்வணிகம்

ஜூலை 1 முதல் சிலிண்டர் விலை உயர்வு

ஜூலை 1ம் தேதி முதல் சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூபாய் 594 க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொல்கத்தாவில் 4 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூபாய் 620 ஐம்பதுக்கு விற்கப்பட்டது. மும்பையில் ரூபாய் 3.50 காசு உயர்த்தப்பட்டு ரூபாய் 594 விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மார்ச் முதல் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில் கடந்த மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 11 முதல் அதிகபட்சமாக ரூபாய் 37 வரை விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் படி இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் மானியம் இல்லாத 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ஜூன் மாதம் 37 ரூபாய் உயர்த்தி ரூபாய்606.50 காசாக நிர்ணயித்துள்ளது.

இந்த மாதம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஒரு ரூபாய் முதல் ரூபாய் 4 வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சென்னையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 4 உயர்த்தப்பட்டு ரூபாய் 610.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால் இந்த மாதம் மிகவும் குறைவாக ரூபாய் 4 வரை நகரங்களுக்கு ஏற்றார் போல் உயர்த்த பட்டதாக தகவல் வெளியானது.

ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால் சந்தை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலவாணி.

அந்நிய செலவாணி எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையில் வைத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை அதிகரித்ததற்கு அடுத்து தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டின் இல்லத்தரசிகளுக்கு வேதனையை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *