அன்பும் உறவும்

அன்பு மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது

ஓர் உண்மை சம்பவம்

இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நடந்த ஒரு சம்பவமே. காலை சுமார் ஏழு மணி அளவில் பேருந்து ஒன்றுக்காக ஒரு நபர் காத்துக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் சுட்டெரிக்கும் வெளயிலை கூட உணர முடியாமல் உறங்கிக் கொண்டிருந்தார்.

மணி சுமார் 7.15 ஆகும் நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுநர் கண்களை கசக்கியபடி சூரிய ஒளியால் கண்கள் கூசிய நிலையில் விழ்த்து அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி முகத்தை நன்றாக கழுவிவிட்டு, போதையில் இருந்து சற்றே தெளிந்து பேருந்திற்காக காத்திருந்த அந்த நபரை நோக்கிச் சென்றார்

அந்த நபரின் பதற்றம்

ஆட்டோ ஓட்டுனரின் வருகையை அறிந்த அந்த நபர் சற்று பதற்றம் அடைந்தார். அருகில் வந்த ஆட்டோ ஓட்டுனர், ‘சார் என் போன் ச்விட்ச் ஆப்,உங்க போன் இருந்தா குடுங்களே, ஒரு போன் பண்ணிட்டு தந்தடறேன்’ என்று அந்த நபரின் தொலைபேசியை கேட்டான். இந்த நபருக்கு, போதையில் இருந்து தெளிந்த இவன் யாருக்கு அழைக்கப் போகிறான் என்று மனதிற்குள் கேள்வி எழுப்பியபடி மெதுவாக தொலைபேசியை கொடுத்தார்.

அதிர்ச்சியின் உச்சம்


எதோ எண்களை அழுத்தியபடி அந்த ஆட்டோ ஓட்டுனர் ஒரு எண்ணிற்கு அழைத்து, ‘செல்வி நேத்து சரக்கடுச்சுட்டு மட்டையாயிட்டே,போன்ல வேற சார்ஜ் இல்ல, ஹாஸ்பிட்டல் போனூனு சொன்னியே ரெடியா இரு வந்தடறேன்’ என்று கூறினார். தொலைபேசியில் சத்தம் சற்று அதிகமாக இருந்ததால் அஆட்டோ ஓட்டுநரின் மனைவியின் பதிலும் கேட்டது. ‘சரிபா பத்திரமா வீடு வந்து சேரு, நான் ரெடி ஆகறேன்’ என்று கூறினார். தொலைபேசியில் இருந்து எண்னைகூட அழிக்காமல் அந்த நபரிடமே தொலைப்பேசியை ஒப்படைத்தார்.

கற்றக் கொள்ள வேண்டிய இரண்டு விசயங்கள்


இந்த சம்பவத்தின் மூலம், மனைவிமார்கள் அனைவரும் மதுவை ஆதரிக்க வேண்டும் என்பதல்ல இங்கு விசயம்.

ஒன்று, இங்கு அந்த ஓட்டுநர் அவரின் இயல்பை அபப்டியே தன் துணையிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் காட்டுகிறார். அதைவிட முக்கியமான விசயம் அந்த இயல்பை அவரின் மனைவியும் அப்படியே ஏற்றுக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்துகிறார்.

இரண்டு, அந்த ஓட்டுநர் தன் மனைவி மீது கொண்ட நம்பிக்கையால் மட்டுமே அந்த தொலைபேசியில் இருந்து எண்னை அழிக்காமல் அந்த நபரிடமே ஒப்படைத்தார்.

அன்பு அனைத்தையும் மாற்றும்


இப்படிப்பட்ட துணை கிடைத்தால் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகளே. பிறகு அன்பு மட்டுமே உலகை ஆளும். அன்பு ஒன்று மட்டுமே அனைத்தையும் உருக்குலைக்கும் ஆற்றல் படைத்தது. மனதை உருக்குலைத்துவிடாதா? அன்பு ஒன்றிற்கு மட்டுமே இந்த உலகம் சற்று நெழிந்து குழைந்து அசையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *