சினிமா பாடல்கள்

கரகாட்டக்காரன் படம் பாடல் வரிகள் பாட்டாலே புத்தி சொன்னார்….

காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிற்கும் படங்கள் ஒரு சில மட்டுமே. அப்படி ஒரு படம் தான் கரகாட்டக்காரன். 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படம் தற்போதும் ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது.இந்த படத்தில் மேலும் ஹைலைட் அதில் வரும் பாடல்கள்தான் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது இளையராஜா போட்ட அனைத்து பாடல்களும்.ராமராஜன் – கனகா ஜோடியாகவும், காமெடிக்கு கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மற்றும் குணச்சித்திர வேடங்களில் சண்முகசுந்தரம், காந்திமதி, சந்திரசேகர், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்

காளயர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும்
கட்டில் பாடலின்
மெட்டு போடசொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே
எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *