ஆன்மிகம்ஆலோசனைவேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்பு வியாபாரம், பணவரவு பெருக வேண்டுமா

நமது வாழ்க்கையில் முக்கியமாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது அவசியமாக இருக்கின்றது. வேலைக்குச் செல்ல முடியாதவர்கள் வியாபாரம் போன்ற தொழிலில் ஈடுபடுகின்றனர். வேலை வாய்ப்பு இருந்தாலும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் இவர்களுக்குப் பண வரவும் இவர்கள் பணியில் முன்னேற்றம் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு கிடைத்தல்

வேலைவாய்ப்பு கிடைப்பது, பணவரவு பெருக்குவது மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எளிய வகையான ஆன்மீக பரிகாரத்தை நாம் பூஜை செய்யும்போது நமக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

எளிய பூஜை

இந்த எளிய பரிகார முறைகளை ஸ்ரீ.குரு.வாமனன் சேஷாத்ரி அவர்கள் மூலமாக நாம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அவருடைய இந்த வழிகாட்டுதல்கள் பலரின் வாழ்வுக்கு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது.

அருகம்புல் சாற்றி மந்திரம் ஜெபம்

எளிய பரிகாரங்கள் நாம் செய்யும்போது நமக்கான வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஸ்ரீ.குரு.வாமனன் சேஷாத்ரி அவர்கள் நமக்கு வழங்கியிருக்கும் அந்த எளிய பரிகாரத்திற்கு தேவையான பொருட்களாவன அருகம்புல் மற்றும் மந்திர உச்சரிப்புடன் கூடிய விநாயகர் வழிபாடு இவற்றை நாம் முறையாகப் பின்பற்றி வரும்போது நமக்கான முன்னேற்றம் விரைவில் வந்து சேரும்.

வாழ்வில் ஏற்றம் தரும் பணவரவு

ஸ்ரீ.குரு.வாமனன் சேஷாத்ரி அவர்கள் வழங்கியிருக்கும் ஆன்மீக பரிகாரங்கள் குறிப்பின்படி அறுகம்புல்லை இரண்டு விரல் அளவில் தினசரி கணபதிக்கு சாற்றி வர நாம் நினைத்தது நடைபெறும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நினைத்த முன்னேற்றம் கிடைக்கும் மேலும் பணவரவு அதிகரிக்கும்.

கணபதி மந்திரம்

ஸ்ரீ குரு வாமனன் அவர்கள் வழங்கியிருக்கும் இந்த எளிய பரிகார முறைகளான அருகம்புல்லை இரண்டு விரல் அளவு எடுத்து 108முறை

ஓம் கீம் கூம் கணபதி நமஹ ஸ்வகா

என்ற மந்திரம் மனதிற்குள் உச்சரித்து கணபதிக்கு அருகம்புல் சாற்ற வேண்டும்.

கணபதி வழிபாடு

10 நிமிடங்கள் கழித்து கணபதிக்கு சாற்றிய அருகம்புல்லில் இருந்து ஒரு சிறு அருகம்புல் எடுத்து நமது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். அல்லது தலையில் பெண்கள் வைத்துக் கொள்ளலாம். மேலும் காதில் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கணபதி அருள் நமக்குக் கிடைக்கும்.

ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி

முழு மனதுடன் செய்ய வேண்டியது அவசியமாகின்றது மேலும் இதுகுறித்து விளக்கமாக அறிந்து கொள்ள ஸ்ரீ.குரு வாமனன் அவர்கள் யூடியூப் சேனலை லிங்கினை இங்குக் கொடுத்துள்ளோம். ஸ்ரீ.குரு. வாமனன் சேஷாத்ரி லிங்கினை கிளிக் செய்து பார்க்கவும்.

பக்தியுடன் பூஜை செய்தால் பலன்

வேலைவாய்ப்பு தேடி கொண்டிருப்பவர்கள் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட முயற்சி செய்பவர்கள் அத்துடன் நல்ல வருமானம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து அருகம்புல்லை கணபதிக்கு சாற்றி மந்திரம் உச்சரித்து வரும்போது வெகுவிரைவில் நமது தேவைகள் நிறைவேறும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம்.

மேலும் படிக்க:

அருகம்புல் பயன்படுத்துவிதம்

இந்த காலகட்டத்தில் அருகம்புல்லை ஒரு கட்டாக வாங்கி அதனை நல்ல கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இதனால் எந்த தவறும் இல்லை என்று ஸ்ரீ.குரு.வாமனன் சேஷாத்திரி அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். ஆனால் பிரிஜ்ஜில் அருகம்புல் வைக்கும் பகுதியில் அசைவ உணவு வைத்தல் குறித்த முழுமையான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

வருமான உயர்வு, வியாபார முன்னேற்றம்

நமக்கு வேலை கிடைத்த பின்பு, வருமான உயர்வு வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைத்த பின்பு கணபதிக்கு நன்றி சொல்லும் விதமாக மந்திரத்தைத் தொடர்ந்து உச்சாடனம் செய்து வரலாம். தொடர்ந்து பயன்படுத்தி வருதல் சிறப்பு தரும்.

மேலும் படிக்க : வரலட்சுமி விரதம் பூஜை விதிமுறைகள்

அருமகம்புல் தினசரி பயன்படுத்தியபின்

எளிய பரிகாரத்தை எல்லோரும் செய்து வருதல் என்பது சிறப்பு வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் கிடைக்கப் செய்யும். அருகம்புல்லை தினசரி மந்திர உச்சரிப்பு செய்தபின் அதனை உடலில் படுமாறு வைத்து அந்த நாளின் முடிவில் செடிகளில் அருகம்புல்லை போட்டுவிடலாம் இதுபோல் பக்தியுடன் செய்து வருவதால் நமது தேவைகள் நிறைவேறும்.

மேலும் படிக்க:

காமதேனுவின் அருள், அளவில்லா செல்வம் பெருக ஜன வசியம் அதிகரிக்க வேண்டுமா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *