செய்திகள்வணிகம்

செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முடிவு

இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்களின் முதலீடுகள் அடுத்து வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று மும்பையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத் தொகை திட்டங்களை அறிவித்து இருப்பது மேக்கிங் இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வெற்றி என போஃபா செக்யூரிட்டிஸின் ஆய்வாளர் அமீஷா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் யுஎஸ் ஸ்டான்டர்ட் சார்ட்டட் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட சர்வே அடிப்படையில் வியட்நாம், கம்போடியா, பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் பக்கம் தான் உற்பத்தியாளர்களின் பார்வை திரும்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதே போல மருந்து உற்பத்தி, வாகன உற்பத்தி, ஆடை உற்பத்தி என பலதுறை உற்பத்திகளை ஈர்க்கவும் அரசு முயன்று வருகின்றன. சாம்சங், விஸ்டரான், பெகட்ரான், லாவா டிக்சன், மைக்ரோமேக்ஸ் என சுமார் 22 நிறுவனங்கள் செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்களை இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்ய விரும்புகின்றன.

இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் டாலர்களை இந்த செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தவும் இது தான் காரணம். சீனாவில் இருந்து விலகி மாற்று இடங்களுக்கு புலம்பெயர விரும்பும் நிறுவனங்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்தியாவில் தொழில்துறை முதலீடு மற்றும் உற்பத்தி அதிகரிக்க வேண்டி மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளன.

அமெரிக்கா சீனாவுக்கு இடையேயான மோதல் போக்கை தொடர்ந்து சீனாவிலிருந்து தங்களது உற்பத்தி தலைமை இடங்களை தெற்காசிய நாடுகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை பல துறைகளை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன என்பது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *