செய்திகள்தமிழகம்

இவர்கள் எப்படி பொறுப்பாவர்கள்- ஐகோர்ட் கேள்வி..

தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்த வழக்கில் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்த வழக்கில் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுவர் இடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் சஞ்சய், இசக்கி பிரகாஷ், அபுபக்கர் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஒரு மாணவன் உயிரிழந்தார். இந்நிலையில் பள்ளியில் சுவர் இடிந்து உயிரிழந்த விவகாரம் குறித்து பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்  இவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தனர். சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சில மாதங்களுக்கு முன் தான் இவர்கள் பொறுப்பேற்ற நிலையில், இந்த விபத்துக்கு இவர்கள் எப்படி பொறுப்பாவர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *