செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் நவம்பர் 25 வரை தொடரும் கனமழை

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். அதீத கனமழை பெய்யும் மாவட்டங்கள். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டம் என்று எச்சரித்துள்ளன. இந்திய பெருங்கடல் மற்றும் இதை ஒட்டியுள்ள தெற்கு வங்ககடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளன.

  • தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
  • கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
  • எச்சரிக்கப்பட்ட மாவட்டங்கள்

காற்றழுத்த தாழ்வு

இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில் இவை தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளன.

கனமழை பெய்ய வாய்ப்பு

கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் 25ஆம் தேதி வரை வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கப்பட்ட மாவட்டங்கள்

கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, காரைக்கால், திருச்சி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *