சினிமா

வைராலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரம்ப காலத்தில் தத்தி தாவி போராடி நடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கடவுள் கருத்துக்களை கூறி கண்டபடி பேச்சு வாங்கிக் கொண்டிருக்கின்றார். சினிமாக்காரங்கண்ணாவே என்ன வேணா பேசலாமா என்றபடி பலரும் மற்றும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தூவி வருகின்றனர்.

திடீரென்று இவர் ஏன் இப்படி பேசுகிறார் கடவுளுக்கு ஏது தீட்டு, எந்த கடவுள் தீட்டு பற்றி சொன்னது என்றெல்லாம் பேசி இருக்கின்றார் .
இவருடைய அடுத்த படம் பர்ஹானா இந்த படம் பிரமோஷனுக்காக இவர் இப்படி பேசி இருக்கின்றார் என தகவல்கள் கிடைக்கின்றன. ‘இது தேவையா அம்மா உனக்கு’ என்று பலரும் ஆதங்கம் கொள்கின்றனர். அம்மணி என்னவோ இருக்கின்ற பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என ஈசியாக எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

பரவாயில்லை அப்படியே இருந்தால் ஆனால் இது சமூக ஊடகங்களுக்கு அவுல் மெல்வது போன்ற உணர்வு தான் இன்னும் சற்று காலத்திற்கு நல்ல டாப்பிக்கை கொடுத்துவிட்டு சென்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் என கலாய்கின்றனர். எது எப்படியோ, நல்லா பாத்துக்கோங்க என்ற அவருடைய ரசிகர்களும் ஆதங்கதுடன் இருக்கின்றனர்.

சர்ச்சை கருத்துக்களாக இவருடை கருத்துக்களை பலர் திரித்துவிட்டு குளிர்காய்கின்றனர். பொதுவாழ்வில் இது எல்லாம் சகஜமப்பா என்பது ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *