சினிமா

எளிமையான போட்டோ ஷூட்டில் மக்களைக் கவர்ந்த அனுபமா

அனுபமா பரமேஸ்வரனின் போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வரவேற்பு அளித்துள்ளது.

காதலை காதலிப்பது போல் வந்த திரைப்படம் பிரேமம். இந்த மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகிவர். நிவின் பாலி நடித்த இந்தப் படத்தில் முதல் காதலியாக சிறிய வேடத்தில் மேரி என்ற பெயரில் வந்த இவர் யார் இந்த புது வரவு கதாநாயகி என்ற ஆவலை திரையுலகில் எழுப்பியவர் அனுபமா பரமேஸ்வரன்.

கேரளத்துப் பெண் குட்டியாக இருக்கும் அனுபமா மலையாள படங்களில் மட்டும் அல்லாமல் கன்னடா, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் கலக்கி வந்தார். தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி என்னும் படத்தில் கோழிப் பண்ணை வைத்து நாட்டு முட்டை என்று சொல்லி சாதம் முட்டை விக்கும் கதாநாயகியாக கலக்கல் இருப்பார்.

கொரோனாவால் வீடுகளில் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் அனைவருமே செய்வதறியாது பல புது விதமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நம் கேரளத்து கதாநாயகி சமூகவலைதளங்களில் ஆக்டிவாக பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

கேரளா என்றவுடன் பச்சை பசேல் என்ற சூழல் தான் நமக்கு நினைவுக்கு வரும் அப்படி ஒரு பச்சை பசேல் பின்னணியில் சிவப்பு நிற குடை போன்ற தொப்பியை தன் சுருண்ட கூந்தலுக்கு மேல் அணிந்து எளிமையான உடையில் அருமையான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அனுபமா இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்ட இந்த புகைப்படத்திற்கு பலர் நல்ல விதமாக பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு அனுபமாவும் நன்றி கூறுவதாக பதிலளித்துள்ளார்.

வீட்ல இருக்குற அனைவருக்குமே பொழுதுபோக்கு தேவைப்படுதுல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *