செய்திகள்

டோலோ 650 ….மருத்துவர்கள் எச்சரிக்கை..!

டோலோ 650-ஐ அதிகமாக உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும், நிலையில், சிறிய அளவில், காய்ச்சலோ அல்லது சளி, தொண்டை கரப்பு இருந்தால் அதிகமான மக்கள் டோலோ 650 -ஐ எடுத்துக்கொள்கின்றனர். இதில் சில நன்மைகள் இருந்தாலும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

அதாவது டோலோ 650 ஐ அதிகமாக எடுத்துக்கொண்டால், குமட்டல், குறைந்த இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், பலவீனமான உணர்வு, அதிக தூக்கம், உடல் நலக்குறைவு, மலச்சிக்கல், வாய் வறட்சி உள்ளிட்ட பொதுவான பக்க விளாவுகளைகளை உண்டாக்குக்கூடும் என்றும், சிலருக்கு மெதுவான இதயத் துடிப்பு, குரல் நாண் வீக்கம், நுரையீரல் தொற்று, மூச்சுத் திணறல் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பு ஆகியவை சில தீவிர பக்க விளைவுகளாக கருதப்படுகிறது.மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துக்களை உட்கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *