செய்திகள்தமிழகம்

குட் நியூஸ்:- குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா வழக்குகள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி இன்று 200க்கும் கீழ் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இன்று தமிழகத்தில் புதிதாக 196 கொரோனா வழக்குகள் மட்டும் பதிவாகியுள்ளதாகவும் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,51,013 உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 554 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,10,228 ஆக உள்ளது. மேலும் ஒரே நஆளில் கொரோனா மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் , இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,015 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், மக்கள் அலட்சியமாக செயல்படாமல், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்த்ய் கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுநலன் கருதி:- பொதுவெளியில் செல்லும் போது கட்டாயம் முக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *