வேலைவாய்ப்புகள்

Data entry operatorக்கான வேலைவாய்ப்பு

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் குழந்தை நலக் குழுமம் (ம) இளைஞர் நீதிக்குழுமம் ஆகியவற்றிற்கு முறையே ஒரு கணினி இயக்குபவர் வீதம் மொத்தம் இரண்டு பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்தென்காசி மாவட்டத்தில் குழந்தை நலக் குழுமம்
பணியின் பெயர்கணினி இயக்குபவர் பதவி
பணியிடங்கள்2
விண்ணப்பிக்க கடைசி தேதி13.09.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
DCPU தென்காசி காலிப்பணியிடங்கள்:

கணினி இயக்குபவர் பதவி – 2 பணியிடங்கள்

கணினி இயக்குபவர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12th (10+2), Diploma / Certificate in Computers முடித்திருக்க வேண்டும்.

DCPU Data Entry Operator வயது வரம்பு:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தென்காசி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.11,916/- சம்பளம் வழங்கப்பட உள்ளது

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 13-செப்-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *