செய்திகள்தமிழகம்

விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்: 12 பேர் ரத்தக் காயம்

விருதுநகர் மாவட்டத்தில் தெருநாய் ஒன்று சிறுவர்களை விரட்டி விரட்டி கடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மங்காபுரம், முத்தன் தெரு மற்றும் ஆண்டத்தம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இந்நிலையில், இந்த நாயை மற்ற நாய்கள் விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெறிநாய் தெருவில் செல்வோர்களை அனைவரையும் கண்மூடித்தனமாக விரட்டி, விரட்டி கடித்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த முருகன், தமிழ்செல்வி, தாமோதரன் மற்றும் சிறுவன் ராஜேஷ் உள்ளிட்ட 12 பேர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதிலும் வெறி அடங்காததால், பசு மாட்டின் தாடை மற்றும் கால்களை கடித்துள்ளது. இதனால் மாடுகளுக்கு ரத்தக் காயம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள் நாயை அடித்துக் கொண்றனர். நகராட்சி ஊழியர்கள் தலையிட்டு தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *