செய்திகள்டெக்னாலஜிதேசியம்

மத்திய தொழில் நுட்பத் துறை அதிரடியாக மொபைல் செயலிகளுக்கு தடை

தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக இருக்கும் முன்பு 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் தற்போதும் 118 சீன செயலிகளுக்கு மத்திய தொழில்நுட்பத்துறை தடை விதித்துள்ளன.

சீனாவின் ரூல்ஸ் ஆஃப் சர்விகவல், ரைசிங் எம்பெயர் நெட்ஈஸ் கேம்ஸ், மாபியா சிட்டி யொட்டா கேம்ஸ், சோவுல் ஹண்டர்ஸ், ஹாய் மெய்டு,, பியூட்டி கேமரா பிளஸ், ஐபிக், விபிஎன் ஃபார் டிக்டாக், டண்டன், யூ லைக், பைக் ரேசிங், லுடோ ஆல் ஸ்டார், கேரம் ஃப்ரண்ட்ஸ், எம்வி மாஸ்டர், கேலரி ஹெச்டி, வெப் பிரவுசர், மியூசிக் mp3 பிளேயர், ஆப் லாக், கேம் ஆப் சுல்தான், டேங்க் டங்க்ஸ், ரைஸ் ஆப் கிங்டம்ஸ், சைபர் ஹன்டர், கவர்ன்மெண்ட் விசார்ட், விசாட் ரீடிங், சூப்பர் கிளீன், வூவ் மீட்டிங், இன் நோட், சாய்டு, ஃபேஸ் யூ, கட் கட், பப்ஜி கேம் போன்ற செயலிகளுக்கு நேற்று மத்திய தொழில்நுட்பத்துறை தடை விதித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் மற்றும் வெளியேயும் இது தொடர்பாக பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். உடனே நடவடிக்கை எடுக்கவேண்டிய விவகாரம் என்பதால் இந்தியர்களின் தகவல்களுக்கு ஆபத்தான செயலிகளை தடை விதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டன. இச்செயலியின் மூலம் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட முடியும் என்பதாலும் தகவல்களை பிறருக்கு பகிர முடியும் என்பதாலும் இன்று சீரிய நடவடிக்கையை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

இம்முறையின் பாதுகாப்பு நலன் கருதி சீனா செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தன. இந்திய மொபைல் பயன்பாட்டாளர்கள் மற்றும் ஆன்லைன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட் டன இந்திய தரப்பில் 20 பேர் உயிரிழந்தார்கள். சீன தரப்பில் 35 பேர் இறந்தார்கள்.

விவகாரத்தை தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்க, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லையில் அமைதி திரும்பின. சீனாவிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க நினைத்த மத்திய அரசு முதல்கட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தன. டிக் டாக், யூசி ப்ரவுசர் உட்பட பல முன்னணி செயலிகள் மேற்கண்டவை அடிபட்டன.

இந்தியர்களின் தகவல் பாதுகாப்பிற்காக சீன செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் சில செயல்களுக்கு சீனா தடை விதித்தன. கடந்த மூன்று நாட்களாக மீண்டும் லடாக் எல்லையில் இந்திய. சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளன.

இதனால் இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன, இதுதொடர்பாக நேற்று டெல்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *