சினிமா

பிக்பாஸ் 4 தொடர்ந்து ஆரியின் புதிய படம் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடிகர் ஆரி நடிக்க உள்ள புதிய பட அறிவுப்புகள் வெளியாகின. முதன் முறையாக இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘ரெட்டச்சுழி’ படம் மூலமாக அறிமுகமானவர். ‘நெடுஞ்சாலை’, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘மாயா’ போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் கவனத்தை ஈர்த்தவர்.

‘பிக்பாஸ் 4’ விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் டைட்டில் வின்னர் ஆனார் நடிகர் ஆரி. துணிச்சலோடு கருத்துக்களை பதிவு செய்தது மற்றும் இவரது நேர்மையான அணுகுமுறையால் ரசிகர்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர். 16 கோடி மக்கள் இவர் குணத்திற்காக வாக்களித்து டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுத்தனர்.

மேலும் படிக்க ; முதன் முதலாய் ஒரு…

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் நிலவியது. தற்போது அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் ஆரி காவல்துறை அதிகாரியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்புகள் கிளம்பியது. படத்தின் பூஜையில் இயக்குனர் முருகதாஸ் கலந்துள்ளார். ரகுமான் இசைக்குழுவில், ஸ்டரிலின் சத்தியா இசை அமைக்க, வித்யா பிரதீப் ஹீரோயினாக உள்ளார்.

மேலும் படிக்க : மகேஷ் பாபு பிறந்தநாளையொட்டி தற்போது வெளியான மோஷன் போஸ்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *