ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்

என்னது… குங்குமத்தால் ஒருவரை வசியம் செய்ய முடியுமா!!!!!

பெண்களின் அழகை மேலும் அழகூட்டும் ஒரு பொருளாக குங்குமம் உள்ளது.குங்குமம் இடுவது அழகிற்காக மட்டுமல்ல அது ஒரு மங்கலகரமான பொருள்.லட்சுமி தேவியின் கடாட்சம் குங்குமத்தில் நிறைந்துள்ளது. அதனால்தான் திருமணமான பெண்கள் நெற்றியிலும் வகிடிலும் கட்டாயம் குங்குமத்தை வைத்துக்கொள்கிறார்கள்… இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மகத்துவம் நிறைந்த குங்குமம் மேலும் அதிசக்தி வாய்ந்ததாக ஒருவரை வசியம் செய்யும் அளவிற்கு வசிய குங்குமம் ஆக மாற்ற பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் போதும்…

வசிய குங்குமம் தயார் செய்யும் முறை

வசிய குங்குமத்தை தயார் செய்ய நமக்கு தூய்மையான தாழம்பூ குங்குமம் தேவை. பின்பு சுத்தமான குங்குமப்பூ வேண்டும்.இவை இரண்டையும் முதலில் வாங்கி வைத்து கொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு ஏதுவான ஒரு வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையை சுத்தம் செய்து லக்ஷ்மி தேவியின் படத்தை துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்து கொள்ளுங்கள். அலங்கரித்த மகாலட்சுமி தாயாரின் முன்பு தீபமேற்றி ஒரு கிண்ணத்தை தாயார் முன்பு வைத்துக் கொள்ளுங்கள். பின்பு உங்களது கையில் தாழம்பு குங்குமத்தை எடுத்துக்கொண்டு அதனை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் ஒவ்வொரு சிட்டிகையாக எடுத்து குங்கும அர்ச்சனை செய்வது போன்று போட்டுக்கொள்ளுங்கள்..

இப்படி ஒவ்வொரு முறையும் குங்குமத்தை அர்ச்சனை செய்யும்போது நீங்கள் உச்சரிக்க வேண்டிய வசிய மந்திரம்

ஓம் நமசிவாய, சகலரும் சகலமும் வசி வசி

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும் . 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போதும் உங்கள் கைகளால் மகாலட்சுமி தாயார் முன்பு உள்ள கிண்ணத்தில் ஒரு சிட்டிகை குங்குமத்தை இட வேண்டும். இவ்வாறு வழிபட்ட குங்குமம் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் மகாலட்சுமி தாயார் முன்பு இருக்கட்டும். மறுநாளிலிருந்து அந்த குங்குமத்தை திருமணமான பெண்கள் நெற்றியிலும் வகிடிலும் வைத்துக் கொள்ளலாம்.திருமணம் ஆகாத பெண்கள் நெற்றியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் பெண்கள் இந்த வக குங்குமத்தை அணிந்து கொள்வதால் நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்திற்கு சென்றாலும் அதில் வெற்றி நிச்சயம்.நீங்கள் எடுக்கும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் .நீங்கள் நினைக்கும் அனைத்தும் உங்கள் வசப்படும்…

மேலும் படிக்க : விநாயகரைத் துதிக்க விநாயகர் அகவல்

எனவே இந்த வசிய குங்குமத்தை நீங்களும் தயாரித்து மகாலக்ஷ்மியின் அருளை முழுமையாகப் பெற்று நலமுடன் வாழுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *