ஆன்மிகம்ஆலோசனை

வீட்டில் பண வரவை அதிகரிக்கும் எளிய பரிகாரம்

வீட்டில் பண வரவை அதிகரிக்க இந்த ஒரு எளிய பரிகாரத்தை வீட்டில் தொடர்ந்து செய்து பாருங்கள்.

நாம் அனைவருமே எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்கவே முடியவில்லை என்று புலம்பும் பழக்கம் உண்டு. நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறோம் எவ்வளவு வருமானம் வந்தாலும் அது அத்தனையும் செலவாகி விடுகிறது எப்படி பணத்தை மிச்சப்படுத்துவது சேமிப்பது என்று தெரியவில்லை என்று புலம்புவதற்கான ஒரு எளிய பரிகாரம் இந்த பதிவில் பார்க்கலாம்.

பண வரவை அதிகரிக்க எளிய பரிகாரம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்த பின் 21 ஏலக்காய் எடுத்து கொள்ளவும். அதன் பின்பு வெள்ளை நூலில் மஞ்சள் தடவி அது காய்ந்த பின்பு நாம் எடுத்து வைத்த 21 ஏலக்காய் மாலை கோர்த்து வீட்டில் உள்ள லட்சுமி தேவியின் விக்ரகம் அல்லது படத்திற்கு அந்த மாலையை போட்டு வழிபட வேண்டும். நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மேலும் நன்மையை தேடித் தரும்.

இந்த ஏலக்காய் மாலையை பிரம்ம முகூர்த்தத்தில் போட வேண்டும் இதை எக்காரணம் கொண்டும் நீங்கள் மறக்க வேண்டாம். கஷ்டப்பட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறக்காமல் அதிகாலையில் எழுந்து இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். சில வாரங்களிலேயே உங்கள் பணம் அதிக செலவு ஆகாமல் சேமிப்பிற்காக எடுத்து வைக்கும் அளவு மிச்சம் ஆகும். எதிர்கால சேமிப்பிற்கான சிந்தனைகளை உங்களுக்குள் ஏற்படுத்தும். மேலும் தேவையற்ற விரைய செலவுகளை தவிர்க்கும். அனைவரும் இந்த எளிய பரிகாரத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து அதற்கான பலனை பெறுவீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *