இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -16.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 16.09.2026
பரபாவ வருடம் ஆவணி 30, புதன்கிழமை, September 16, 2026 பஞ்சாங்கம் –
திதி : 08:59 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : விசாகம் 05:22 PM வரை பிறகு அனுஷம்
யோகம் : வைத்ருதி 12:22 PM வரை, அதன் பின் விஷ்கம்பம்
கரணம் : பாலவம் 08:59 AM வரை பிறகு கௌலவம் 09:50 PM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (16.09.2026)
மேஷம் -தொழில் வெற்றி
ரிஷபம் -போட்டி உண்டாகும்
மிதுனம் -அமைதி உண்டாகும்
கடகம் -தெளிவு பிறக்கும்
சிம்மம் -எதிர்ப்பு அதிகரிக்கும்
கன்னி -ஏமாற்றம் உண்டாகும்
துலாம்-நட்பு அதிகரிக்கும்
விருச்சிகம்-கவனம் தேவை
தனுசு -லாபம் பெருகும்
மகரம் -குடும்பத்தில் நலம்
கும்பம் -பணவரவு அதிகரிக்கும்
மீனம் -தொழில் உயர்வு
எம். எஸ். சுப்புலக்ஷ்மி பிறந்த நாள்
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (எம். எஸ். சுப்புலட்சுமி) கர்நாடக இசையுலகின் மிகச் சிறந்த பாடகிகளில் ஒருவராகவும், இந்திய உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக்கலைஞராகவும் திகழ்கிறார்.
தனது 13-ஆம் வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் பாடி அரங்கேறினார். பக்திப் பாடல்கள், கர்நாடக சங்கீதம், மற்றும் சுப்ரபாதம் ஆகியவற்றிற்குத் தனக்கெனத் தனி முத்திரை பதித்தார்.
1966-இல் ஐக்கிய நாடுகள் சபையின் (UN General Assembly) பொதுச் சபையில் பாடிய முதல் இந்திய இசைக்கலைஞர் இவரே.
பாரத ரத்னா (1998) – இந்தியாவின் மிக உயரிய குடிமகன் விருது
.ராமன் மகசேசே விருது (1974) – ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் இவ்விருதைப் பெற்ற முதல் இந்திய இசைக்கலைஞர்.
சங்கீத கலாநிதி (1968) – சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிய விருது
.பத்ம பூஷண் (1954) மற்றும் பத்ம விபூஷண் (1975).

