செய்திகள்தேசியம்

இந்தியாவின் வருவாய் இழப்பு குறித்து உலக வங்கி கணிப்பு

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. தொடக்க மற்றும் இடைநிலை கல்வியிலிருந்து 39.1 கோடி பள்ளி மாணவர்கள் வெளியேறி உள்ளார்கள். 65 லட்சம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறுவதற்கு கொரோனா நோய்தொற்று பேரிடர் காரணமாக அமைய வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளன.

  • நாடுகள் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார இழப்பு.
  • மாணவர்களுக்கு பள்ளி பாடத்திட்டங்களில் கணிசமான அளவில் கற்றல் இழப்புகளும் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளன.
  • இந்தியா மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளன.

நீண்டகாலம் பள்ளிகள் திறக்கப்படாததால் இந்தியா மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டன. இதன் மதிப்பு 40 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ரூபாய் 30 லட்சம் கோடிக்கும் அதிகமான அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று உலக வங்கி கணித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *