செய்திகள்தமிழகம்

வானிலை மையம் தகவல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்ச மழை பெய்த மாவட்டங்கள் கோவை மாவட்டத்தில் பரம்பிக்குளம் மூன்று சென்டிமீட்டர். சின்கோனா இரண்டு சென்டிமீட்டர். வால்பாறை 3 சென்டிமீட்டர். வட்டாட்சியர் அலுவலகம் 3 சென்டிமீட்டர். சின்னக்கல்லார் நான்கு சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேவலா 4 சென்டி மீட்டரும், அவலாஞ்சி நான்கு சென்டிமீட்டர், மேல் பவானி ஒரு சென்டிமீட்டர் பதிவாகியுள்ளன.

தேனி மாவட்டம் பெரியார் ஒரு சென்டிமீட்டர், கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை ஒரு சென்டிமீட்டர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

வானிலை மையம் தகவல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இந்தப் பகுதிகளில் கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *