செய்திகள்தமிழகம்தேசியம்

நிஜ வாழ்க்கையில் பெண் போலீஸ் விவகாரத்தில் நடிகை டேக் எடுத்துள்ளார்.

தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து வந்தான், வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்து வந்தார் நடிகை டாப்ஸி.

அமைச்சர் மகனை கைது செய்தது தொடர்பாக டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பெண் போலீசுக்கு ஆதரவாக நடிகை டாப்சி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகின்றன. தொற்று பரவாமல் தடுக்க லாக் டோன் பிறப்பிக்கப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசும் அறிவித்துள்ளது. இதனால் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

மக்கள் இந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாக் டவுன் விதிகளை மீறி சூரத் நகரில் சுற்றியுள்ளார். இவர்களின் நண்பர்களும் காரில் இருந்தனர்.

அடிக்கடி சுற்றி வருவதை கண்ட பெண் போலீஸ் சுனிதா யாதவ் என்பவர் காரை மடக்கி விசாரித்துள்ளார். ஆத்திரமடைந்த பிரகாஷ் நான் அமைச்சர் மகன் என்றும் காரை விட்டு விடுமாறு கூறி உள்ளார்.

சுனிதா நீங்க யாராக வேண்டுமானாலும் இருங்க? லாக் டவுன் நேரத்தில் இப்படி வெளியே ஊர் சுற்றுவது குற்றம் என்று தெரியாதா? அரசு கட்டுப்பாட்டுக்கு அடிபணியாது வெளியே வந்ததே தவறு. இதுல அதிகாரம் வேறயா? என்று கேட்டுள்ளார்.

பெண் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பிரகாஷ் பெண் போலீசை மிரட்ட தொடங்கியுள்ளார். இதற்கு அசராத சுனிதா பிரகாஷ் மற்றும் இவர்களது நண்பர்களையும் கைது செய்துள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்துள்ள பிரகாஷ். அதிரடியாக சுனிதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இவ்வாறு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதை செய்துள்ள நடிகை டாப்சி கொரோனாவால் நாங்கள் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டோம்.

இதற்கு பதிலாக நிஜ வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார். இந்த விவாதம் பரபரப்பைஏற்படுத்தி வருகிறது. நிஜ வாழ்க்கையில் பெண் போலீஸ் விவகாரத்தில் நடிகை டாப்ஸி டேக் எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *