ஆன்மிகம்ஆலோசனை

அனைத்து பாவங்களும் தீர ஏகாதசி விரதம்..!!

“ஏகாதசி விரதம் என்பது இவ்விரதம் அனுஷ்டிப்பதால் நம் அனைத்து பாவங்களும் தீர்ந்து, சொர்கலோகத்திற்கு செல்லும் ஒரு வாய்ப்பு” தான் இந்த விரதம் என்றே சொல்லலாம். ஏகாதசி விரத முறை, ஏகாதசி விரதம் பெருமாளுக்குரிய விரத முறையாகும். இந்த விரதத்தை மூன்று நாட்கள் கடைப்பிடிப்பார்கள்.

உங்களுக்கு எப்படி வசதியோ அதை பொருத்து இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். முதன் முதலாக இந்த விரதத்தை இருப்பவர்கள் வைகுண்ட ஏகாதசியில் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் இருக்க முயற்சி செய்யலாம். இதனால் வாழ்வில் அனைத்து சகல செல்வங்களும் வந்து சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசிகள் வரும். இந்த 12 மாதமும் வருகின்ற ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வரக்கூடிய வைகுண்ட ஏகாதசியில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். தசமி முதல் நாளே பூஜைக்குரிய துளசியை பறித்து வைக்க வேண்டும். இன்றைய தினத்தில் துளசியை பறிப்பதால் பாவம்.

தசமி திதி

அதாவது ஏகாதசிக்கு முந்தைய நாள் தசமி திதியாகும். இன்றைய தினம் விரதத்தை தொடங்கி ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசியன்று விரதத்தை முடிப்பார்கள். இதுவே ஏகாதசி விரத முறையாகும்.

ஏகாதசி

விரத முறை : முதல் நாளே வீடெல்லாம் சுத்தம் செய்து விட வேண்டும். தசமி அன்று காலை எழுந்ததும் குளித்து விட்டு தசமி அன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். மறுநாள் ஏகாதசி அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், பால்,பழம், துளசி, துளசி தண்ணீர், இவற்றை பெருமாளுக்கு படைத்து விட்டு அதை உண்ணலாம்.

துவாதசி

மறுநாள் காலை துவாதசியன்று சூரிய உதயத்திற்கு முன் அனைத்து காய்கறிகளையும் வைத்து சமைக்க வேண்டும். இதில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்ட வத்தல், முக்கியமாக இடம் பெற வேண்டும். இவற்றையெல்லாம் இறைவனுக்கு படைத்து விட்டு நாமும் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். இதை சூரிய உதயத்திற்கு முன் செய்து முடிக்க வேண்டும். இதுவே ஏகாதசிக்கு உரிய விரதம் முறைகளாகும்.

இது ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை ஏகாதசி(சுக்ல பட்ச ஏகாதசி), தேய்பிறை ஏகாதசி (கிருஷ்ண பட்ச ஏகாதசி), இரண்டிலும் இதை கடைப்பிடிக்கலாம். முடியாதவர்கள் வருடம் ஒரு முறை வைகுண்ட ஏகாதசி அன்றாவது இந்த விரதத்தை மேற்கொள்வதால் வைகுண்ட பதவி கிடைக்கும்.

ஒருமுறை இந்த விரதத்தை மேற்கொண்டால், வருடா வருடம் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பாக்கியத்தை பகவான் மகாவிஷ்ணு நமக்கு அருள்வார். எல்லாம் வல்ல இறைவனின் அருளை பெற இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள். இதனால் சகல சவுபாக்கியங்களும், சகல ஐஸ்வர்யங்களும் வாழ்வில் வந்து சேரும். சகல பாக்கியங்களும் வாழ்வில் கிடைக்கப் பெற்று இறைவன் அருளை பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *