செய்திகள்தமிழகம்

இம்ப்ரோ எனும் 66 மூலிகைகளைக் கொண்ட சித்தமருத்துவ பொடி

சீனாவில் கொரோனா கட்டுப்படுத்துவதற்கு அவர்களின் பாரம்பரிய மருத்துவமே உதவி வருவதாகக் நம்பப்படுகிறது. நமது பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.

பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் இந்த இம்ப்ரோ மருத்துவப் பொடியில் வைரஸ் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இம்மருந்தை பரிசோதிக்க கோரி அரசிடம் வைத்த கோரிக்கை செல்லுபடியாகாமல் போனதால், நீதிமன்றத்தை தஞ்சம் அடைந்த போது மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சோதனையின் முடிவில் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரியவந்தது. மத்திய, சித்தா மற்றும் ஆயுர் வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்க படுவதாக அரசு தெரிவித்தது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள சித்த மருத்துவர் சுப்ரமணியத்தின் வீடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரம்பித்து 22 ஆண்டுகளாக தொடர்ந்து இவரின் முயற்சியின் முன்னேற்றமே இம்ப்ரோ எனும் 66 மூலிகைகளைக் கொண்ட சித்தமருத்துவ பொடியாகும்.

எளிதாக கிடைக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, வெட்டிவேர் முதல் சற்று அரிதாக கிடைக்கும் வேர்கள் வரை 66 மூலிகைகளை கொண்டு தயாரித்த இந்த மருந்து வைரஸை எதிர்க்கக்கூடிய தாக உள்ளது.

கொரோனாவிற்காக மருந்து கண்டுபிடிக்க உலகமே முயற்சித்து வந்து கொண்டிருக்கின்ற சூழலில் சித்த மருத்துவர் ஒருவர் கண்டறிந்த மருந்தில் எதிர்ப்புசக்தி இருக்கலாம் என தமிழக சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் கொண்ட குழு இவ்வாறாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *