ஆன்மிகம்ஆலோசனை

சவால்களை போக்கும் விநாயகர் மந்திரம்!

விநாயகப் பெருமான் வழிபாடு என்பது முக்கியமான முதன்மையானது ஆகும். நாம் எது தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தான் தொடங்குவோம். முதல் பூஜையாக விநாயகருக்கு தான் செய்யப்படுகின்றது. கணபதி வாழ்வில் நம்முடன் பயணிக்கும் போது சிறப்பை பெறுகின்றது

வாழ்வில் சங்கடங்கள் ஏற்படுவது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால் இந்த சங்கடங்கள் வாழ்வில் நம்பிக்கை இழக்க வைத்து விடும். சில நேரத்தில் வாழ்வில் பிடிப்பு என்பது குறைந்து காணப்படும். வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்து விடும். துன்பங்களால் மனது தொலைந்து போகும். அப்படி ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்ய உங்கள் வாழ்வில் இருக்கும் சகல துன்பங்களையும் இன்பமயம் ஆக்கி அமைதியை தரும் விநாயகர் மந்திரம் இங்கு கொடுத்துள்ளோம்.

சக்தி வாய்ந்த விநாயகரின் மந்திரத்தை முழுமூச்சாய் பக்தி பெருக்குடன் சரணாகதி செய்து அவரை வணங்கி வர வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் மறைந்து போகும். எல்லாமே ஏமாற்றமாக இருந்தது என்ற நிலைமை மாறி தொட்டதையெல்லாம் நிச்சயம் ஒரு நல்ல மாற்றமாக இருக்கச் செய்யும். தன்னம்பிக்கையை பெருக்கும் இத்தகைய மந்திரத்தை நம் வாழ்வில் என்றும் உச்சரித்து வர வேண்டும். தியான நிலையில் தினசரி உச்சரித்து வர இம்மந்திரம் பாசிட்டிவ் மாற்றங்களை நம் வாழ்வில் உண்டாக்கி நம்மை அமைதியாக இருக்கச் செய்யும் அன்பு பெருக்கச் செய்யும் தன்னம்பிக்கை பெருகும். தலை தூக்க வைக்கும் அபூர்வ மந்திரமான விநாயக மந்திரத்தை நீங்கள் தினசரி முழு சரணாகதி பக்தியுடன் பாடி வர நிச்சயம் மாற்றம் ஏற்படும்

விநாயகர் பெருமானுடைய மந்திரம்:

ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா!

உமையவளின் பாலனே விநாயகா!

தேவர் மூவர் போற்றும் வேத நாயகா!

தேவாதி தேவனே விநாயகா!

வல்வினைகள் தீர்க்கும் சக்தி நாயகா!

வேண்டும் வரம் தந்திடும் விநாயகா!

மௌனத்தின் முழுப்பொருளே நாயகா!

மேலும் படிக்க : விநாயகர் அருள் தரும் மந்திரங்கள்

முக்கண்ணன் மைந்தனே விநாயகா!

பக்தர்களின் உறைவிடமே நாயகா!

சர்வ சக்திகளின் பிறப்பிடம் விநாயகா!

முக்திதனை அளித்திடுவாய் நாயகா!

உனை நித்தம் பணிந்திடுவோம் நாயகா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *