ஆன்மிகம்ஆலோசனை

விநாயகரைத் துதிக்க விநாயகர் அகவல்

விக்னங்களை தீர்ப்பவர் விக்னேஸ்வரர், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் மேற்கொள்பவர்களுக்கு அனைத்து சங்கடங்களைத் தீர்ப்பவர் விநாயகர். பௌர்ணமி திதியில் இருந்து நான்காவது நாள் வருவது சதுர்த்தி திதி. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். சங்கடஹர சதுர்த்தியில் விரதம் மேற் கொள்பவர்களுக்கு அனைத்துச் சங்கடங்களும் தீரும்.

  • இன்று கார்த்திகை மாதம் சங்கடஹர சதுர்த்தி.
  • சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ளும் முறை.
  • விநாயகரைத் துதிக்க விநாயகர் அகவல்.

விநாயக சதுர்த்தி

ஆவணி மாதம் வரும் அமாவாசை அடுத்து நான்காவது நாள் வளர்பிறை சதுர்த்தி திதி விநாயக சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அதற்கு பதினைந்து நாட்கள் முன்பு வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு விரதத்தை துவங்குவர்.

தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை வரும் அனைத்து சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வர். இன்று கார்த்திகை மாதத்து சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

விரதமுறை

பொதுவாக அனைத்து பூஜை புனஸ்காரம் களுக்கும் இருக்கும் சுத்தப்படுத்தும் இந்த விரதம் முறையிலும் கடைபிடிக்க வேண்டும். காலை முதல் மாலை வரை எந்தவித உணவும் உட்கொள்ளாமல் மாலை 6 மணிக்கு மேல் பொது கோவில்களில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பங்கு கொண்டு விநாயகரின் அருள் பெற்று விரதத்தை முடிக்க வேண்டும்.

பிரசாதம்

சங்கடஹர சதுர்த்தி பிடி கொழுக்கட்டை விசேஷம். அரிசியை பொடித்து செய்யப்படும் இந்த பிடி கொழுக்கட்டை வெல்லம் சேர்த்து இனிப்பாக செய்து விநாயகருக்கு நிவேதனமாக அர்ப்பணித்து விரதம் மேற்கொள்பவர்கள் இதையே இரவு உணவாக உண்டு விரதத்தை முடிக்கலாம். பிரசாதம் செய்முறை விளக்கம் விரிவாக பார்க்க இதனை கிளிக் செய்யுங்கள்.

மேலும் படிக்க : ஹரி-ஹரனுக்கு சிறப்புமிக்க கார்த்திகை

ஸ்லோகம்

இறைவனின் நாம ஸ்மரணை மிகப்பெரிய ஸ்லோகமாக இருந்தாலும் லவுகிக வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கும் நமக்கு பலவிதமான ஸ்தோத்திரங்களில் நாட்டமும் ஆர்வமும் இருப்பதால் விநாயகருக்கு உகந்த விநாயகர் அகவலை காண்போம்.

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்⁠
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! ⁠
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து ⁠
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் ⁠
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து ⁠
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் ⁠
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து ⁠
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் ⁠
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் ⁠
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *