சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்

டிஆர்பிக்காக இப்படி எல்லாமா செய்வாங்க விஜய் டிவியின் கிரிமினல் மைண்ட்..

நமது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. எல்லா சீரியல்களுக்கும் தனி ரேட்டிங் உள்ளது.

எப்பொழுதுமே டிஆர்பி இல் முதலிடத்தை பிடித்து முன்னணி நாடகமாக வலம் வந்தது நமது பாரதிகண்ணம்மா சீரியல். இப்படி மவுசுக்கு குறையாமல் ஓடிக் கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் சில நாட்களாக ரேட்டிங் குறைந்துவிட்டது.அரைத்த மாவையே அரைத்த கதையாக பல வருடங்களாக ஒரே கதையை ஓட்டிக்கொண்டு இருப்பதால் மக்கள் அதனை தற்போது விரும்புவதில்லை. இதில் கதாநாயகியாக நடித்து வந்த ரோஷினியும் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

மேலும் படிக்க : உங்க வீட்டுக்கு பொன்மகள் வந்தாள் ஆ!!!

அவருக்கு பதிலாக மாடல் அழகி வினுஷா தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்து கண்ணம்மா கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்து வருகிறார். இருந்தபோதிலும் இந்த சீரியலுக்கு தற்போது டிஆர்பி ரேட்டிங் என்பதே குறைந்துவிட்டது. இப்படியே போனால் கம்பெனியை இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரேட்டிங்கை அதிகப்படுத்தும் நோக்கில் தற்போது விஜய் டிவி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு உள்ளது. அதாவது பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியலை இயக்குபவர் ஒருவரே என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அந்த டைரக்டர் பாரதி கண்ணம்மா சீரியலை தூக்கிவிட நெம்புகோளாக ராஜா ராணி சீரியலை உபயோகப்படுத்துகிறார். மூன்றாவது முறையாக ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் மகா சங்கமமாக இணையவளது இதனால் கண்டிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் கொஞ்சமாக சூடு பிடிக்கும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் படிக்க : திரையுலகின் கபடி நாயகன் விஷ்ணு விஷாலுக்கு ஹாப்பி பர்த்டே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *