சின்னத்திரைசெய்திகள்

ஊரடங்கில் யூடியூப்பில் அதிரடி காட்டும் பிரியங்கா

பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் சேனல்களில் ஆங்கரிங்கில் காமெடியுடன் பொழுது போக்கும் நம்ம வீட்டு பிரியாங்கா, அழகு பதுமை, சிரிக்கும் சித்திரம் பிரியங்கா தேஷ்பாண்டே புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கியுள்ளார். அதில் தன் அட்டகாசத்தை அரங்கேற்றி வருகிறார். பிரியங்கா பொதுவாகவே ஹியூமர் நிறைந்த பெண் தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் பொழுதுபோக்காக வைத்திருப்பதில் அவர் ஒடு கில்லி.

கில்லி பிரியாங்காவை கிலியாக்கமா என்ன கொரானா ஆனால் அந்த லாக்டவுன் கிலியை கில்லி போட பார்க்கின்றது ஆனால் நம்ம பிரியாங்கா அதற்கும் டேக்கா கொடுத்து யூடியூபில் களம் இறங்கிவிட்டார். தான் யூடியூப் ஆரம்பித்த ஒரு வாரத்தில் 20,000 பேருக்கு மேற்பட்டோர் பிரியங்கா தேஷ்பாண்டே சேனல் ஐ லைக் கொடுத்து கமெண்ட்டுகளை அள்ளிவீசி வருகின்றனர் என்னதான் பிரியங்கா அழகு பதுமை என்றாலும் பழகுவதற்கு இனிமையானவர். தனது பெயருக்கு ஏற்றார்போல் பிரியமானவர் என்று பலர் பேசுவதைநம்மால் உணர முடிகின்றது.

அவரது சிரிப்புக்கு சிக்காத மனிதர்களே இருக்க முடியாது வெள்ளந்தியான சிரிப்பு பழகுவதில் ஒரு சிறப்பு கொண்டவர் பிரியங்கா, ஆனால் கொரானாவின் பாதிப்பினால் உலகமே ஊரடங்கில் கிடக்க நம்ம பிரியங்கா மட்டும் என்ன செய்வார், சும்மா இருப்பாரா அதான் இந்த சேனல் இந்த ஊரடங்கு நாட்களில் மட்டும் பல சில பிரதிநிதிகள் ஆளாளுக்கு யூடியூப் சேனல் தொடங்க நம்ம பிரியங்காவும் தற்போது தொடங்கிவிட்டார்.

அலட்டிக்கொள்ளாத பேச்சு அன்பான போக்கு மக்களே. மக்களே என அழைக்கும் அன்பு எப்போதும் பார்சா இருந்தாலும் தர லோக்கலாக இறங்கிப் பழகுவது பிரியங்காவுக்கு பிளஸ் என சொல்லலாம். தான் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை மீறி நம்மோடு நெருங்கி வருவது பிரியங்கா, பிரியங்கா தான் தன்னுடன் பணியாற்றும் யார் எப்படி கழுவி ஊற்றினாலும் அதை ஸ்போட்டிவாக எடுத்துக்கொண்டு சிரிப்பை மட்டுமே நமக்குள் பதியவைக்கும் சிறந்த பாசிட்டிவ் பெண்மணியாவார். சிறந்த ஆங்கர் நம்ம வீட்டு பெண்ணென்றால் அது நமது பிரியங்கா தான் தன்னைப்பற்றி யார் என்ன கலாய் கலைத்தாலும் அதற்கெல்லாம் அசையாமல் ஈடுகொடுத்து செய்வதில் பிரியங்காவுக்கு நிகர் பிரியங்கா என்று சொல்லலாம்.

சமீபத்தில் கீர்த்தி, சாந்தனு மற்றும் அர்ச்சனா அத்துடன் சிவாங்கி சாம் விஷால், உமா ரியாஸ்கான் என பலரும் யூட்யூபில் கலக்கிவர அதில் தானும் பங்கேற்க வேண்டுமென பிரியங்கா தேஷ்பாண்டே நுழைந்துள்ளார். அவரைப்போலவே மபகா ஆனந்த் யூடியூப் சேனலில் களமிறங்கியுள்ளார் எது எப்படியோ மக்களுக்கு உற்சாகம் குறையாது தள்ளுமுள்ளு எங்கும் இருக்காது. தாரை தப்பட்டை இல்லாமல் இதில் இறங்கி லோக்கல் அடிக்க பிரியங்கா இருக்கின்றார். மககளே, மக்களே நம் மனதை கொள்ளை கொள்ளும் பிரியங்காவிற்கு என லைக்குகளும் சப்ஸ்கிரைப்பர்களும் சரமாரியாக வருகின்றது, என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல அதிசயமும் அல்ல தான் ஒரு சிறந்த பொழுதுபோக்கு ஆங்கர் என்பதை பிரியங்கா எப்பொழுதும் நிருபித்து வருகின்றார். அதன் வெளிபாடே இந்த சப்ஸ்கிரைபர் கமெண்ட்ஸ்கள் ஆகும். அப்படியே வாழ்க பிரியங்கா, வளர்க பிரியங்கா இதை கொளுத்திப் போட்ட பெருமை சிலேட்டுகுச்சியை சாரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *