ஆன்மிகம்ஆலோசனை

வீட்டிற்கு உயிரோட்டமான விஷயம் வாஸ்து..!!

வாஸ்து என்பது ஒரு வீட்டிற்கு உயிரோட்டமான விஷயம் என்று சொல்லப்படுகிறது. கட்டிடத்திற்கு உயிர் உண்டா என்றால் அந்த காலத்தில் வீடு கட்டும் போதே அந்த வீட்டிற்கு உண்டான ஜாதகத்தையும் ஆயுளையும் எழுதிவிடுவார்கள். இப்படி எழுதுவது அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் இது குறைந்து வருகிறது.

ஒரு வீடு என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு நியதி இருக்கிறது. எல்லா வகையான கட்டிடத்திற்கும் இது பொருந்தக் கூடியது. பஞ்ச பூதங்களின் சரியான சேர்க்கையை வாஸ்து என்று கூறப்படுகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்களும் ஒன்றாக இணைந்து அமைப்பதே ஒரு கட்டிடத்தின் அமைப்பாகும்.

இதில் ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும், அங்கு வாஸ்து பிரச்சனை ஏற்படும். பஞ்சபூதங்களும் சரியாக அமைந்தால் அங்கு எல்லாம் சரியாக அமையும். நீரினால் பிரச்சனை இருக்கிறது என்றால், அங்கு பணம் தங்காது. வீட்டில் நீரை அதிகமாக செலவு செய்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்.

சிவ பெருமானின் வியர்வை துளியில் இருந்து கிடைத்த ஒரு பூதம் தான் இந்த வாஸ்து பூதம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு வீடு கட்டும் போது இந்த வாஸ்து பூதத்திற்கு சரியான பூஜைகளை செய்த பிறகு தான் ஒரு வீட்டின் தோற்றம் அமைக்கப்படும். இவருடைய அருளினால் அந்த வீடு நீண்ட நாட்களுக்கு ஆயுள் பலத்துடன் இருக்க வேண்டும் என்று இந்த பூஜை செய்யப்படும்.

வாஸ்து புருஷர் என்று அழைக்கப்படுபவர். எல்லா வீடுகளும் நூற்றுக்கு நூறு வாஸ்துப்படி தான் அமைந்து இருக்குமா? என்றால் அப்படி அமைவதில்லை. இப்படி நூற்றுக்கு நூறு வாஸ்துபடி அமையும் இடம் என்றால் அது கோவிலாக தான் இருக்கும்.

நீங்கள் கோவிலுக்கு போய் வந்தாள் நமக்குள் ஒரு நல்ல மாற்றமும், ஒரு நல்ல பாஸிட்டிவ் எனர்ஜி கிடைப்பது எதனால்? அந்த கோவிலில் நல்லவிதமான வாஸ்து அமைந்திருப்பதால் என்று நம்மால் கூற முடியும். மேலும் வாஸ்து பற்றி நாளை தெரிந்து கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *