செய்திகள்தமிழகம்தேசியம்

உழைப்பாளியாய் உயர்ந்த வசந்தகுமார் மரணமடைந்தார்!

தமிழ்நாட்டில் உழைப்பாளியாய் இருந்து திரு. வசந்த குமார் அவர்கள் நாளடைவில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர் . காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சைப் பெற்று வந்துகொண்டிருந்தார். அவருக்கு 70 வயது ஆகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்து வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இறுதி சடங்குகள் அனைத்தும் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற இருக்கின்றது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பழனிச்சாமியென அனைத்து பிரமுகர்களும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருந்தனர்.

திரு. வசந்த குமார் அவர்கள் கடுமையான உழைப்பாளி நல்ல திறமைசாலி அதன் காரணமாகவே அவரது டீலர்ஷிப் பொருட்கள் அனைத்தும் நன்றாக விற்றுப் போகும். ஆரம்ப காலகட்டத்திலிருந்து கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறியவர். இவர் தெழுங்கான மாநில ஆளுநர் திருமதி தமிழிசை அவர்களின் சித்தப்பா ஆவார். மற்றும் தமிழிசை அவர்களின் அப்பா குமரிஅனந்தன் அவர்களின் தம்பி என்பது குறிப்பிடத்தகது ஆகும். ஒன்றாக வளர்ந்து தனித்தனி கட்சிகள் இருக்கின்றோம் ஆனால் ரத்தபாசம் என்பது இருவருக்கும் உண்டு.

சுறுசுறுப்பாக இருக்கும் தன் சித்தப்பாவை கண்டு வியந்து அவரைப் போல் இருக்க ஆசை பட்டதுண்டு ஒன்றாகச் சாப்பிடுவது வளர்வது என்று அனைத்தும் சிறுவயதிலிருந்தே கண்டிப்புடன் வளர்ந்த முறைகளையும் நான் மறக்கவில்லை என்பதை உருக்கமான கவிதையுடன் திருமதி தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார். வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கியதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு அதிகமாகக் கொடுத்துக் காப்பாற்றி இருக்கின்றார். “அந்த இறை உங்களைக் காக்க வில்லையே என்று அழுது விம்மிக் கொண்டிருப்பதாக அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *