சினிமாசினிமா பாடல்கள்

வல்லவை என்னை… வல்லவன் படம் பாடல்

வல்லவன் 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிலம்பரசன், நயன்தாரா, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பாடல் வரிகள்:

வல்லவா
என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா

வல்லவா
என்னை வெல்லவா
உன்னை கண்டதே
வரம் அல்லவா

பாதி கண்கள் மூடியும்
பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளம் தான் வாடுதே

சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நான் கொண்டாடுறேன்
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்

வல்லவா
என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா

வல்லவா
என்னை வெல்லவா
உன்னை கண்டதே
வரம் அல்லவா

என் நெற்றி மீது
உன் வேர்வை சிந்தி
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்
உன் மூச்சு காற்று
வெப்பத்தை சேர்த்து
மூழ்கும் முன்னே
என்னை மீட்டு விடும்

மேலும் படிக்க : விழாக்கால விற்பனைக்கு வியூகம் வகுக்கும் அமேசான்

வெளித் தோற்றம் தரும்
காதல் யாவும்
சில நாளே வரும் மாயம் ஆகும்
அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்
குணம் தானே பல யுகம் வாழும்

நீயாய் எனை
இழுப்பதை அணைப்பதை
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்
வெளியே அது
பிடிக்கலை பிடிக்கலை
என ஒரு நாடகம் நடிப்பேன்

வல்லவா வல்லவா


ஏமாந்து போனேன்
ஏமாந்து போனேன்
தென்றல் என்றே
உன்னை எண்ணி விட்டேன்
நீ என்னை சூழ்ந்து
ஆட்கொண்ட போது
புயலென்று
உன்னை கண்டு கொண்டேன்

என்னோடு நீ இருக்கும் போது
பொருள் இல்லா பல சண்டை தோன்றும்
எனதறையில் உள்ள சுவர் நான்கும்
வித விதமாய் உன் படம் தாங்கும்

காலம் பல கடந்தது கடந்தது
உறவிது உறவிது கண்ணா
யாரும் இதை பிரித்திட நினைத்திட
உடல் மட்டும் உலவிடும் கண்ணா

வல்லவா
என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா

வல்லவா
என்னை வெல்லவா
உன்னை கண்டதே
வரம் அல்லவா

பாதி கண்கள் மூடியும்
பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளம் தான் வாடுதே
ஏஏஏஏஏ

சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நான் கொண்டாடுறேன்
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்

வல்லவா
என்னை வெல்லவா
கொல்லவா அள்ளவா

வல்லவா
என்னை வெல்லவா
உன்னை கண்டதே
வரம் அல்லவாவல்லவா

மேலும் படிக்க : தாய் கிழவி தாய் கிழவி… திருச்சிற்றம்பலம் படம் பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *