சினிமா பாடல்கள்

வைதேகி காத்திருந்தாள் படம் பாடல் வரிகள் ராசாத்தி உன்ன….

வைதேகி காத்திருந்தாள் இயக்குனர் ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஆண் : { ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது } (2)

ஆண் : பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது

மேலும் படிக்க : கண் பேசும் வார்த்தைகள்.. 7G ரெயின்போ காலனி

ஆண் : { கண்ணுக்கொரு
வண்ணக்கிளி காதுக்கொரு
கானக் குயில் நெஞ்சுக்கொரு
வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)

ஆண் : தத்தித் தவழும்
தங்கச் சிமிழே பொங்கிப்
பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம் யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு நீதானே
கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா
கண்ணே

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது

ஆண் : { மங்கை ஒரு
கங்கை என மன்னன்
ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல்
கதை சொன்னால்
என்ன } (2)

ஆண் : அத்தை மகளோ
மாமன் மகளோ சொந்தம்
எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட அம்மாடி நீதான்
இல்லாத நானும் வெண்மேகம்
வந்து நீந்தாத வானம் தாங்காத
ஏக்கம் போதும் போதும்

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது காத்தாடி
போலாடுது

மேலும் படிக்க : பொங்கி வரும் காவேரி படம் பாடல் வரிகள் வெள்ளி கொலுசு மணி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *