செய்திகள்தேசியம்

அன்லாக் 4.0 மத்திய அரசு அறிவித்த புதிய தளர்வு விவரங்கள்

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகள் கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளன. நான்காம் கட்ட பொது முடக்கம் தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

இதில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும். சினிமா, தியேட்டர்கள் நீச்சல்குளம் போன்றவற்றைத் திறக்க தடை தொடரும் என்று கூறப்பட்டுள்ளன.

செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50% ஆசிரியர்கள் பணியாளர்களை அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7 முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. பகுதிகளில் செப்டம்பர் 30ம் தேதி வரை முழு பொது முடக்கம் தொடரும் என்று தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொது முடக்கத்தை மாநில அரசு அமல்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 21 முதல் 100 பேர் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். செப்டம்பர் 21 முதல் திறந்த திரையரங்குகள், திறந்த கலை அரங்குகள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படிக்கும் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கட்டாயம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ-பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையையும் விதிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்லாக் 4.0 புதிய தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு இவ்வாறாக முழு விவரம் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *