செய்திகள்

உக்ரைன் போர் பல ஆண்டுகள்’ நீடிக்கும்:- Truss அச்சம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, “புடினின் முடிவின் தொடக்கமாக இருக்கும்”: என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் Liz Truss தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதல் தடுக்கப்படாவிட்டால், மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்; அது NATO-வை தலையிடச் செய்யும் ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்; ஐரோப்பாவில், இந்த போர் பல ஆண்டுகள்’ நீடிக்கும் என்று அஞ்சுவதாகவும் , உக்ரைனில் இருந்து அனைத்து துருப்புக்களையும் அகற்றும் வரை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என வெளியுறவு அமைச்சர் Truss தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் புடின் கணித்ததை விட ரஷ்ய வீரர்கள் எதிர் தாக்குதல்களை எதிர்கொள்வதால், இந்தப் போரில் மிகவும் விரும்பத்தகாத வழிகளைப் பயன்படுத்த புடின் உறுதியாக இருப்பதாக, Truss அச்சம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *