மருத்துவம்

அரிசியின் பயன்கள்.. மற்றும் அரிசியின் முக்கியத்துவம்…!!

பல வகைகள்


அரிசியில் சம்பா எனப்படும் அரிசி, கார் அரிசி, மணக்கத்தை, கருங்குறுவை, ஈர்க்கு சம்பா, புமுடு சம்பா, மைச்சம்பா, கோடை சம்பா,மல்லிகை சம்பா, வினாதடி சம்பா, கல்துண்டை சம்பா, குன்றிமணி சம்பா,சொர்ணவல்லி, காளான் சம்பா, குறுஞ்சம்பா, மிளகு சம்பா,சீரக சம்பா, காடை சம்பா, கைவரை சம்பா,குண்டு சம்பா, இலுப்பை பூச்சம்பா, கோரை சம்பா, வாலான், மைசம்பா, மணிச்சம்பா என பல வகைகள் உண்டு.

நெல்மணியை நீர்விட்டு அவித்து, காயவைத்து உரலில் வைத்து குத்தி, உமியை நீக்கினால் புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி, உமியை நீக்கி பயன்படுத்தினால், அது பச்சரிசி. இதற்கு அடுத்த படியாக, கைக்குத்தல் அரிசி ஏராளமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.

ஆரோக்கிய உடலுக்கு

கைக்குத்தல் அரிசி, பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டாலும், இதன் மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிவதில்லை. இதனால் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறது. நாவுக்கு ருசியாகவும், உண்பதற்கு ஏதுவாகவும் உள்ள, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியையே, பலர் விரும்புகின்றனர். ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி மிக சிறந்தது.

கைக்குத்தல் அரிசி

சாப்பிட்ட உடன், எளிதில் ஜீரணமடையும் தன்மை கொண்டது. மலச்சிக்கல் பிரச்னை கொண்டவர்களுக்கு, மிகுந்த பலன் கொடுக்கும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நாள்பட்ட மலச்சிக்கல் போகும். சீறுநீரை பிரிக்கும் சக்தி, கைக்குத்தல் அரிசிக்கு இருக்கிறது.

ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வு கொடுப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பித்த அதிகரிப்பை குறைக்க வல்லது. நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது. உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை நீக்கி, சருமத்தை பாதுகாக்கும். வாதம், பித்தம், கபத்தை, அதனதன் நிலையில் வைத்திருக்கும்.

நம்மவர்கள், அரிசி உணவை தான், அதிகளவு எடுத்து கொள்கின்றனர். பாலிஷ் செய்த அரிசியை, அதிகமாக உண்பதால், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். இதில் மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்கிய அரிசி நம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் தர கூடியவை. மூங்கில் அரிசி சர்க்கரை நோயால் பாதிக்கபட்ட உடலை சீராக வைக்க உதவுகிறது.

மூங்கில் அரிசியை, பாயசம் அல்லது வெண்பொங்கல் போலவும் செய்து சாப்பிடலாம். இதற்கு அடுத்தது தவிடு நீங்காத அரிசி. தவிடு நீங்காத அரிசியை உண்பதால், அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது. தவிடு நீக்காத அரிசி, இந்தியாவிலும், கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்தபடுகிறது.

உணவு பற்றாக்குறையை போக்க

தமிழகத்தில், இந்த அரிசியை பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டது. தற்போது, குறுகிய காலத்தில், அதாவது மூன்று மாதங்களிலேயே விளையும், நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலை கொடுக்கின்றது. உணவு பற்றாக்குறையை போக்க, இவ்வகை பயிர்கள் மிக உதவியாக உள்ளது. இவ்வகை அரிசிகள் இரண்டு, மூன்று முறை பாலிஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இது, அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும், வெண்மையாகவும் இருப்பதால், மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். மேற்புறத்தில் உள்ள சத்துகள் எடுக்கப்படுவதால், வயிற்றை நிரப்ப பயன்படுத்தபடுகின்றன.

மேலும் படிக்க

அஞ்சறை பெட்டி…வெந்தயத்தின் மகிமை தெரியுமா…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *