ஆன்மிகம்ஆலோசனை

கேட்ட வரம் கிடைக்கும் செவ்வாய் ராகு கால பூஜை

கேட்ட வரத்தை அள்ளித்தரும் அற்புத செவ்வாய்கிழமை ராகு கால பூஜையில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றினால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கும்.

செவ்வாய்கிழமை ராகு கால பூஜை மகிமை

ஒவ்வொரு செவ்வாயும் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது பெண்கள் மட்டுமல்ல இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் இந்த செவ்வாய் கால ராகுகால பூஜையில் முக்கிய பங்கு பெறுகின்றனர். திருமணம் நடைபெற வேண்டும் மற்றும் குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, செல்வம் வளம் வீட்டில் அமைதி ஆகியவை கிடைக்க வேண்டும் என செவ்வாய் கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை இருக்கும் ராகு காலத்தில் நெய் விளக்கு அல்லது எலுமிச்சையில் விளக்கு துர்க்கைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது முக்கியமாக கருதப்படுகின்றது.

கல்யாணமாகாத பெண்கள் ஆண்கள் மதியம் 3 மணி முதல் 4 மணி வரை பூஜை செய்வது உகந்த நேரம் ஆகும்.

செவ்வாய் புதன் வியாழன் நாட்களில் வரும் ராகு காலத்தில் விளக்கேற்றி துர்க்கை வழிபாடு செய்யும்போது நாம் நினைத்தது நடக்கும் என்று முன்னோர்கள் வாக்கு உண்டு.

செவ்வாய் வெள்ளி ராகு காலத்தில் விளக்கேற்றி பூஜை நடத்துவது மிகவும் முக்கியம்.

ராகு கால பூஜை வழிபாடு

விளக்கு ஏற்றும் போது மண் விளக்கு மற்றும் எலுமிச்சை விளக்கு நெய் விளக்கு தாமரைத் தண்டு திரி விளக்கு என பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப விளக்கேற்றி வழிபடுவார்கள்.
துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று நேரடியாக வழிபடுபவர்கள் உண்டு அல்லது வீட்டில் பூஜை ஏற்பாடுகள் செய்து வழிபாடு செய்பவர்களும் உண்டு .ஒவ்வொருவரின் வசதிக்கு ஏற்ப இந்த பூஜை செய்து செய்யும்போது வாழ்வில் திருமண தோஷம் பித்ரு தோஷம் போன்றவை நீங்க பெறும்.

அம்பாளை நினைத்து இந்த பூஜை செய்யப்படும்போது தொழில் வெற்றி கிடைக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் காலம் காலமாக மக்கள் இந்த ராகு காலத்தை போற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை மூன்று மணி முதல் 4 மணி வரை ராகு காலம் இருப்பதால் வழிபாடு நடத்த விருப்பமுள்ளவர்கள் மறக்காமல் இன்றைய வழிபாட்டினை வெற்றிகரமாக நடத்தி தேவி அனுக்கிரகத்தை பெறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *