ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

புதன் கிழமையான இன்று புதன் பகவானுக்க உகந்த நாளாகும் எனவே இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்
சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் நன்மையில் முடியும் விசா தொடர்பான காரியங்களை வெற்றிகரமாக முடிக்கலாம் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள் ஒரு சிலர் வீடு கட்டுவது தொடர்பான காரியங்களில் ஈடுபடுவார்கள் இவற்றில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்
வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பிரயாணங்களால் நன்மையே கிடைக்கும். ஆகவே தைரியமாக பிரயாணங்களை மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்வுக்கு வரும். காதல் தொடர்பான பிரச்சினைகளில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல நாளாகும்.

மிதுனம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும் .

சிம்மம்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வசூலாகும். புதிய கடன்களை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு கடன் கிடைக்கும். பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த காரியங்களையும் முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள்.

கன்னி
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி அடைவார்கள். உங்கள் கடின முயற்சியை நிர்வாகம் புரிந்துகொள்ளும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வழிமுறைகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.

துலாம்
உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம். செலுத்த வேண்டியது வரும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு புதிய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள்.

விருச்சிகம்
சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும் புதிய கல்வி வாய்ப்புகள் தென்படும் படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

தனுசு
சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் உடல் சோர்வை உணர்வீர்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள், விநாயகர் பெருமானை வழிபட விக்கினங்கள் விலகும்.

மகரம்

சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும் உங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் நல்ல பெயர் கிடைக்கும் மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும் உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பல புதிய பாதைகள் தென்படும்.

கும்பம்
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடிவதாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.

மீனம்
கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 4.5.2022

திதி : இன்று காலை 06.56 மணிவரை திரிதியை திதி. பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.47 மணி வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம்.

நாமயோகம் : இன்று பிற்பகல் 03.36 மணி வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

கரணம் : இன்று காலை 06.56 மணி வரை கரசை. பின்னர் இரவு 07.57 மணி வரை வணிசை. பிறகு பத்தரை.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 02.47 மணி வரை அமிர்தயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்…

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 1/2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *