ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

நாள் : சுபகிருது வருடம் ஆடி மாதம் 09 ஆம் தேதி திங்கட்கிழமை 25.7.2022

திதி : இன்று மாலை 06.15 மணி வரை துவாதசி. பின்னர் திரியோதசி.p

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.54 மணி வரை ரோகினி. பின்னர் மிருகசீரிடம்.

நாமயோகம் : இன்று மாலை 04:49 மணிவரை துருவம். பின்பு வியாகாதம்.

கரணம் : இன்று காலை 07.12 மணி வரை கௌலவம். பின்னர் மாலை 04.15 மணி வரை தைத்தூலம். பின்பு கரசை

அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 12. 54 மணி வரை அமிர்த யோகம். பின்னர் காலை 06.51 வரை சித்த யோகம். பின்பு அமிர்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல்: 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 1/2

மேஷம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்

தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைதுறை கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

மிதுனம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வரவு தனவரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி அடைவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.

கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்

சிம்மம்

நேயர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமையும். சுய தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மன அழுத்தம் சற்று கூடுதலாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி

நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக உள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது உடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

துலாம்

விநாயகப் பெருமானை வழிபடவும். கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு

விருச்சிகம்

நேயர்களுக்கு அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படலாம். வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் கல்வியை முடித்து நல்ல வேலைக்குச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாக செல்லும். பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். சொந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள்.

மகரம்

கணவன் மனைவி உறவு சற்று வாக்குவாதங்கள் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும்.

கும்பம்

நண்பர்களால் ஆதாயம் உண்டு கல்வியை முடித்து வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மீனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் பல புதிய வாய்ப்புகளை அள்ளித் தரும். இனிய நாள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது ஆகிய இவைகள் வெற்றி தருவதாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *