ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ரிஷபத்தில் ராகு, கன்னியில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், மீனத்தில் புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்..

இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் குறையும். குழப்பங்கள் விலகி மன நிம்மதி, பூரிப்பு ஏற்படும். தொழில் ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். உங்களின் பணிச்சுமை குறைந்து சுமுகமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
உங்களுக்கு எடுக்கு முயற்சியில் சாதக பலன் உண்டாகும். பண வரவுகள் லாபகரமான பலன் உண்டாகும். என்றாலும் இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் ரீதியாக வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு வாகன வகையில் மற்றும் சொத்து சார்ந்த வகையில் வரவும் காரிய வெற்றியும் ஏற்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் , சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுயதொழில் ஆல் ஆதாயம் பெறுவர்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் தனவரவு சற்று தாமதமாக வாய்ப்பு உண்டு.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நேயர்களுக்கு கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் பெண்களால் ஆதாயம் உண்டு பெண்களுக்கு தன வரவு கிடைக்கும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். புதிய பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டு. தொழில் ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும் வழக்கு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம் நண்பர்கள் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டு எடுக்கின்ற காரியங்கள் வெற்றியடையும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நண்பர்களுக்கு இனிமையான நாளாக இந்த நாள் இருக்கும் சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் மனதிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி இருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களால் உதவி உண்டு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை தொடர்பான பல விவகாரங்கள் வெற்றி அடையும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும். தொழில் ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இதற்கு முன் இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி சாதக பலனைப் பெறலாம்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நீங்கள் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பேச்சில் சற்று நிதானமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பண வரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம். தொழில், வியாபாரத்தைப் பொறுத்தவரை உங்கள் வேலையாட்களால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நீங்கள் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டும். தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாகலாம். இருப்பதை அனுபவிப்பதற்குக் கூட தடை ஏற்படலாம். வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பணிச்சுமை இருக்கும். பேச்சில் சற்று கண்ணியம் தேவை. வண்டி வாகன பயன்பாட்டில் கவனம்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் ஏற்றம் மிகுந்த பலனை பெறக்கூடிய நாளாக இருக்கும். இருக்கும் இடத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படுங்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் பங்குனி 5ஆம் தேதி மார்ச் 19, 2022, சனிக்கிழமை

திதி: பிரதமை பகல் 11.37 மணி வரை அதன் பின் துவிதியைத் திதி

நட்சத்திரம்: ஹஸ்தம் இரவு 11.37 மணி வரை அதன் பின் சித்திரை

யோகம்: விருத்தம் நாமயோகம்

கரணம் : கௌலவம் அதன் பின் தைதூலை

மரணயோகம் நாள் முழுவதும்

நேத்திரம் 2 ஜீவன் 1

நல்ல நேரம்:

காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை

பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை

மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை

இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை

எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *