ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

மனம் லேசாக சிக்கல் இல்லாமல் இருக்க..!!

பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அரைக் கப் ஸ்ட்ராபெர்ரியில் 2 கிராமும், ப்ளாக்பெர்ரியில் நாலு கிராமும், ப்ளாக்பெர்ரியில் 4 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. கலோரிகளும் குறைவாக உள்ளது. இவற்றை சாப்பிடுவதால் குடலியக்கம் நன்கு இயங்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

சீராக மலம் வெளியேற

உலர்ந்த திராட்சை, பேரிச்சை, ஆப்ரிக்காட் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி சோதித்தல் என்னும் கார்போ ஹைட்ரேட்டும் அதிகம் காணப்படுகிறது. யோகாசனம் செய்வது சீராக மலம் வெளியேற உதவுகிறது. காய்கறிகளில் முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், வெள்ளரிக் காய், புடலங்காய், வாழைத் தண்டு, காலிஃப்ளவர் மற்றும் கீரை வகைகளும்.

தானியங்களில் கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, பருப்பு மற்றும் கம்பையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சில நாட்கள் வெந்நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும். ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஹெல்தியாக இருக்க முடியும். ஆமணக்கு எண்ணெய் ,ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணை சமையலுக்குப் பயன்படுத்தலாம். உருளைக் கிழங்கை தோலோடு சாப்பிட்டால் நார்ச் சத்தை பெற முடியும்.

மருத்துவர்களின் ஆலோசனை

தோலை நீக்காமல் வேக வைத்து மசித்து ஒரு பொரியல் போன்று செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். நொறுக்குத் தீனி வகைகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, தர்பூசணி, மாம்பழம் இவற்றை சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு உட்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகு பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல் தீர ஒரு நாளைக்கு 2 அல்லது 3 லிட்டர் நீர் அருந்த வேண்டும். சிறுநீரக நோயாளிகள் மற்றும் இருதய நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைப்படி நீர் அருந்த வேண்டியது அவசியம். தினமும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது கோதுமை சப்பாத்தியை உட்கொண்டால் மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கும்.

ஆரோக்கியத்துக்கு வழி

அரை மணி நேர நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி தினமும் கட்டாயம் செய்து வாருங்கள். குறைந்த அளவில் நார்ச்சத்து உணவு எடுத்துக் கொள்வோர் அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடுவது, மலச்சிக்கல் தொந்தரவு உள்ளது. தலைவலி ஏற்படும், தோல் வறட்சி ஏற்படும், வாயில் துர்நாற்றம் வீசும் தொடர்ந்த மலச்சிக்கல் இருந்தால் மூல நோய், ஆசன வாய், வெடிப்பு பவுத்ரம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட கூடும்.

ஆரோக்கியத்துக்கு வழி ஏற்படுத்துவதில் நல்ல உணவுக்கும் நீருக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதால் வயிற்றுக்குள் செல்லும் உணவு நன்றாக செரிக்கப்பட்டு கழிவுகள் வெளியேற வேண்டும். வெளியேறாத பட்சத்தில் பல உபாதைகளை கூடாரம் இட்டு அமையும். பெரும்பாலானோர் இதில் கவனம் செலுத்தாததால் மலச்சிக்கலின் அவஸ்தைப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *