கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்

தோல்விகளை கண்டு துவலாமல் இவற்றை அடித்தளமாக்கியதால் உருவானது தான் வெற்றி.. தோல்விகள் பாடமானால் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்…

வினா விடைகள்

1.பூங்கொடி என்னும் நூலுக்காக தமிழக அரசு பரிசு பெற்றவர் யார்?

விடை : முடியரசன்

2.தமிழ்நாட்டின் ரவீந்திரநாத் தாகூர் என போற்றப்படுபவர் யார்?

விடை : வாணிதாசன்

3.மலரும் மாலையும், ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியவர் யார்?

விடை : தேசிய விநாயகம் பிள்ளை

4.நாட்டியம் நாடகம் இரண்டிற்கும் பொதுவாக பழக்கத்தில் இருந்த சொல்?

விடை : கூத்து

5.அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர்

விடை : பாரதிதாசன்

6.இமயம் எங்கள் காலடியில் என்ற நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.இந்த நூலின் ஆசிரியர் யார்?

விடை : ஆலந்தூர் மோகனரங்கன்

7.சாலை இளந்திரையன் பெற்ற விருது என்ன?

விடை : பாவேந்தர் விருது

8.சரஸ்வதி நூலகம் எங்கு அமைந்துள்ளது?

விடை : தஞ்சாவூர்

9.பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : உடுமலை நாராயண கவி

10. நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று மாதவியை குறிப்பிட்டவர் யார்?

விடை : இளங்கோவடிகள்

போட்டித் தேர்வுகளுக்கு போட்டிபட்டுக்கொண்டு படித்திருக்கும் நண்பர்களுக்காக சிலேட்டு குச்சி இதுபோன்ற தகவல்களை உங்களுக்கு வழங்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *