டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான குறிப்புகளுடன் தமிழ் தொகுப்பு!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெறும் கனவுடன் வருடம் தோறும் லட்சகணக்கில் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டி பல்வேறு யுக்திகள் போட்டி தேர்வர்களிடையே காணப்படுகின்றது. நீங்கள் போட்டி தேர்வை  எளிதாக வெல்லலாம். ஆனால் அதற்கான வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வினை பொருத்த மட்டில் குரூப் 1 தேர்வை தவிர மற்ற தேர்வான குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 அறநிலைத்துறை போன்ற தேர்வுகளில்  மொழிப்பாடம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. மொழிப்பாடத்தில்  ஆரம்பம் முதல் அனைத்தும் முறையாக படித்து  டெஸ்ட்  எழுதி  மொழிப்பாடத்தில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் உரைநடை, இலக்கணம், இலக்கியம், நீதிகதைகள் அனைத்தும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  சமச்சீர் கல்வி புத்தகத்துடன் 2018 ஆம் ஆண்டில் புதிய பாடப்புத்தகங்கள் வரை அனைத்துப் பகுதிகளையும் படித்து பயிற்சி செய்து எப்பொழுது தேர்வு என்றாலும் எழுதுவதற்கேற்ப தயாராக இருக்க வேண்டும். அடிக்கடி டெஸ்ட் பேட்சுகள் அனைத்தும் சுற்றுப்புறத்தில் வைக்கப்படும் இலவச செண்டர்களை  தவறாமல் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழக புத்தக பக்கங்களை தெளிவாக படித்து வைத்திருப்பவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

டிஎன்பிஎஸ்சி தமிழ் பகுதி:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் பகுதி போட்டிதேர்வுகளின் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாகவுள்ளது. போட்டி தேர்வில் 100 கேள்விகளை கொண்ட தமிழ் பகுதியில் 100 கேள்விகளுக்கு சரியான விடை கொடுத்தால் பாதி வெற்றி  உறுதியாகும். அடுத்த பொது அறிவில் நிச்சயம் 70 முதல் 80 கேள்விகளுக்கு சரியான விடையளிக்கும் பட்சத்தில் கனவு தேர்வை எளிதில் வெற்றி பெறலாம் அதற்கான வெற்றியும்  எளிதில் கிடைக்கப் பெறலாம்.

சிலேட்குச்சி தளமானது போட்டி தேர்வாளர்களுக்கு  தமிழ்பாடத்தில் கேட்கப்படும் கேள்விகளை குறித்தும் தேர்வில் வெல்வது குறித்தும் தொடர்ந்து பதிவு செய்யும் அதனை  தொடர்ந்து படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்.

சங்க இலக்கியம்:

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துபாட்டு நூல்கள்  அகம், புறம் மற்றும் அகம்புறம் நூல்கள் என இரண்டும்  சேர்ந்த பகுதிகளை கோண்ட பாடல்களை கொண்டுள்ளது.

எட்டுத் தொகை நூல்கள்:அகப்பொருள் நூல்கள்:நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித் தொகை, அகநானூறு,

நற்றினை: எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படும் நூல் ஆகும்.நல் என்ற அடைமொழி கொண்ட நூல் நற்றினை ஆகும். தன்னிடம் வந்து சேர்ந்தோரின் புன்கண் துன்பம் மற்றும் அஞ்சும் பண்பினையே கூறும் நூலே நற்றினை ஆகும்.

புறப்பொருள் நூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து
 புறநானூறு:மறம் செய்தலும் அறம் செய்தலும் புறமாகும். அறம், மறம் ஆகியவை புறத்தார்க்கு தெரிவதால் புறம் எனப்பட்டது. புறம், புறப்பாட்டு, தமிழ்கருவூலம் என வரலாற்று நூல் என்ற வேறு பெயர்களும் உண்டு.

அகமும் புறமும் வரும் நூல்:பரிபாடல்
பத்துப்பாட்டு நூல்கள்:பத்துப்பாட்டில் 3 நூல்கள் அகநூல்களாகும்குறிஞ்சிப்பாட்டு – கபிலர்முல்லைப்பாட்டு- நப்பூதனார்பட்டினப்பாலை- உருந்திரங்கண்ணார்

பத்துப்பாட்டு நூல்களில் ஆறு நூல்கள் புறம் பற்றி கூறுகின்றது.திருமுருக்காற்றுப் படை-  நக்கீரர்பொருநாராற்றுப்படை- முடத்தாமக் கண்ணியார்பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருந்திரகண்ணனார்சிறும்பாணாற்றுப்படை- நல்லூர் நத்ததனார்மலைபடுகடாம்- பெருகௌசிகனார்மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்

அகப்புற நூல்கள் பத்துப்பாட்டில் ஒன்று உள்ளது  அது

நெடுநல்வாடை- நக்கீரர் எழுதியது ஆகும். 

வினா:

1. பத்துப்பாட்டு நூல்கள் மொத்தன் எத்தனை?

2. உருந்திரங்கண்ணார் எழுதிய நூல்?

3. எட்டுத் தொகையில் உள்ள புறப்பொருட்கள் யாவை?

4. பத்துப்பாட்டு நூல்களில்  ஆறு புற நூல்கள் யாவை?

5. தமிழ் கருவூலம் என அழைக்கப்படுவது எது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *