கல்விசெய்திகள்தமிழகம்வணிகம்

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய இடங்கள்

நாமக்கல்லில் வருமான வரித்துறை அரசு கட்டுமான பணி ஒப்பந்தக்காரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்துள்ளனர். சத்திய மூர்த்தி அண்ட் கோ என்ற பெயரில் இயங்கும் கட்டுமான நிறுவனம் ஒன்று.

  • அரசின் சார்பில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு.
  • மேம்பாலங்கள்.
  • அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரி கட்டும் பணிகளை பல கோடி மதிப்பில் தொடர்ந்து செய்து வருகின்றது.

இது போல கார் விற்பனை ஷோரூம். கோழிப்பண்ணை, நட்சத்திர விடுதி. மேலும் பல்வேறு தொழில்களும் செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து, வருமான வரித்துறையினர் சோதனை. நாமக்கல் கந்தசாமி நகரில் சத்தியமூர்த்தி வீடு, கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தியுள்ளனர்.

மேலும் வருமான வரித்துறை சோதனையில் ஈரோடு, கோவை, சென்னை, சேலத்தைச் சேர்ந்த இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளிவந்தன. பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 5கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

பெருந்துறை, ஈரோடு ஆகிய இடங்களில் நந்தா கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நந்தா பாலிடெக்னிக், நந்தா இன்ஜினியரிங், நந்தா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ், நந்தா சிபிஎஸ்சி, நந்தா டீச்சர் டிரெய்னிங், நந்தா டெக்னாலஜி போன்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருப்பூர், ஈரோடு, கோவை, சென்னை பகுதியில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தது. இதில் ஈரோடு கல்வி நிறுவனத்திற்கு உட்பட பல மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 5 கோடி கைப்பற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *