வேலைவாய்ப்புகள்

தமிழ்நாட்டு அரசு நியாயவிலைக் கடைகளில் காலியிடங்கள்

அரசாங்க வேலை என்றால் சும்மாவா அதுவும் நம்ம ஊரிலே வந்தால் யார் தாங்க வேணாம்னு சொல்லுவாங்க.

தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மொத்தமா 2700 மேற்பட்ட கணக்கிட முடியாத அளவிற்கு வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

விற்பனையாளர், பேக்கர் என இரு இடங்கள் வெவ்வேறு மாநிலத்தில் வெவ்வேறு எண்ணிக்கையில் உங்களுக்காக காத்திருக்கிறது.

கல்வி தகுதி

விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் பிளஸ் 2 (அ) அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பேக்கர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் பத்தாம் வகுப்பு (அ) அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விற்பனையாளர் மற்றும் பேக்கர் பணியிடத்திற்கு 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். இது பொதுவான தகவல் அவரவர் பிரிவிற்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு.

விண்ணப்ப கட்டணம்

பேக்கர் பணியிடத்திற்கான விண்ணப்பம் ₹100 பொது கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் ₹150 பொது கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவுக்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு. கட்டணத்தை செலுத்தும் முறையை விண்ணப்பத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு வடிவம்

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பள வடிவம்

விற்பனையாளர் பதவி: 4,300-12,000/மாதம்
பேக்கர் பதவி: 3,900-11,000/மாதம்

விண்ணப்பிக்க

அந்தந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஆவணங்கள் விற்கப்படுகின்றன. நேரில் சென்று தகுந்த விண்ணப்பத் தொகை கொடுத்து பெற்று விண்ணப்பிக்கவும்.

முக்கியமான தேதிகள்

தொடக்க தேதிகள்: 06-07-2020

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-07-2020 (17:45)

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான இணைய தளத்தை பார்க்கவும்.

அலுவலகத்தில் பெற்ற விண்ணப்பங்களை நிரப்பி அலுவலகத்திற்கு 31 ஜூலை 2020 மாலை 17:45க்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *