ஆன்மிகம்ஆலோசனை

Tiruppavai Song: ஆண்டாளின் திருப்பாவை பாடல் – 3 பாடலும் விளக்கமும்

மார்கழி மாதம் தொடங்கிய நாளில் இருந்து அனைவரும் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலம் போட்டு பெருமாளை தரிசிக்க அருகில் உள்ள கோவில்களுக்கு செல்வர்.அவ்வாறு வணங்கும் பெண்கள் ஆண்டாள் நாச்சியார் பெருமாளை நினைத்துப் பாடிய மகத்துவம் நிறைந்த திருப்பாவை பாடல்களைப் பாடி வணங்கினால் பெருமாளின் முழு அருளும் கிடைக்கும்.

திருப்பாவை பாடல் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்

ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *