மருத்துவம்

அன்றாட ஆரோக்கிய வாழ்வில் கீரைகளின் பங்கு!

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயந்திர வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவு என்பது மிகவும் விடுப்பட்டுள்ளது. அதிலும் இயற்கை உணவு என்பது இல்லாமலேயே போய்விட்டது குறிப்பாக கீரை உணவு வகைகள் மறைந்துவிடும் அளவிற்கு மனித ஆரோக்கியத்தின் கீரைவகைகள் எவ்வளவு பங்காற்றி வருகின்றன என்பதை பாருங்கள். என்னதான் அசைவ உணவில் சத்துக்கள் இருந்தாலும் அசைவ உணவை விட இங்கு   குறிப்பிட்டப்பட்டுள்ள கீரை வகைகள் எளிதில் கிடைக்க கூடியவை பட்ஜெட்டில் அடங்ககூடியவை, இவற்றை  உணவாக பயன்படுத்தி ஆரோக்கியத்தை பேணிப்  பாதுக்காக்கவும்.

முருங்கை கீரை: 

முருங்கையை நட்டவன் சும்மா போவான் என்பது பழமொழி இதற்கு என்ன அர்த்தம் என்றால் தன் அன்றாட வாழ்வில் எவன் ஒருவன் முருங்கைக்கீரை அதிகம் சேர்த்து வருகிறானோ அவன் தனது வயதாகிய காலத்தில் கம்பு ஊன்றாமல் கம்பீரமாய் நடப்பான் என்று பொருள்படும். முருங்கையானது முருங்கை காய், முருங்கை இலை, முருங்கை ஈர்க்கு, முருங்கைப்பூ மற்றும் முருங்கை பிசின் ஆகிய அனைத்துமே உடல் நலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. முருங்கைக்கீரையில் விட்டமின்“ஏ, பி ,சி” சத்துக்களும் சுண்ணாம்பு சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் சம அளவில் நிறைந்துள்ள முருங்கையை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

குப்பை கீரை: 

இந்தக் கீரையானது குப்பை அதிகமுள்ள இடங்களில் காணகிடைக்கும் அற்புதமாகும்.
குப்பையில் வளர்வதால் இதனை குறைத்து மதிப்பிட முடியாது இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. இந்தக்கீரையை உண்பதன் மூலம் பசி நன்கு தூண்டப்படும், மலச்சிக்கலைப் போக்கும்

பருப்புக்கீரை: 

இந்தக் கீரையில் அதிக விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளன. இந்தக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைப்பதால் இதற்குப் பருப்புக் கீரை என்று அழைக்கப்பட்டது. மிக முக்கியமாக குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உகந்ததாகும்.

முள் முருங்கை கீரை: 

இதனை வேலி அமைப்பதற்காக வளர்க்கின்றார்கள். இது முட்களை கொண்ட மென்மையான கட்டைகள் உடையதாக இருக்கும். ஒரு காம்பில் 3 இலைகள் இருக்கும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு. இந்தக் கீரை துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டதாக இருக்கும். பெண்களுக்கு மாத விளக்கு ஏற்படும் நாட்களில் கடுமையான வயிற்று வலி இருக்கும். அந்த நாட்களில் மாதவிலக்குக்கு ஐந்து நாட்கள் முன்பிருந்து இதன் இலைச்சாற்றை 50 மில்லி லிட்டர் எடுத்துப் பருகி வந்தால் நல்ல பலனை காணலாம்.

வல்லாரைக் கீரை: 

வல்லமை மிக்க கீரை என்பதால் இதற்கு வல்லாரைக்கீரை என்று அழைக்கப்படுகின்றது. இந்தக் கீரையை உண்டு வருவதன் மூலம் மூளை நன்கு செயல்படத் தொடங்கி நல்ல ஞாபக சக்தியை பெற வழிவகுக்கிறது. மேலும் இதில் அதிக அளவு தாது உப்புக்களும், சுண்ணாம்பு சத்து, உயிர் சத்துக்களான ஏ மற்றும் சி அடங்கியுள்ளன பெரும்பாலும் உணவாக பயன்படுத்துவதை விட மருந்தாக பயன்படுத்துவதே அதிகம்.

கீழாநெல்லி கீரை: இந்தக் கீரையானது நீர் நிறைந்த இடங்களான வயல்வெளி, வாய்க்கால் மற்றும் ஓடை ஓரங்களில் நிறைந்து காணப்படும். இதில் கிட்டத்தட்ட அனைத்து சுவைகளும் உண்டு. துவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளை உடையது இந்தக் கீரை. இதன் தளிர்களை எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் சீதபேதி உடனே நிற்கும். மஞ்சள் காமாலையை போக்குவதற்கு இந்தக் கீரையைத் தவிர வேறு மருந்தே கிடையாது. மஞ்சள் காமாலைக்கு அலோபதி மருத்துவத்தில் கூட இந்தக் கீரையை பயன்படுத்தியே மருந்து கொடுக்கப்படுகிறது.

அகத்திக்கீரை:  இதை சீமை அகத்தி, சாழை அகத்தி, முனி என்று பலவாக அழைப்பார்கள். அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இதனை அகத்தி என்று அழைப்பதுண்டு. இதில் உள்ள பூ, வேர் மற்றும் இலை அனைத்தும் மருத்துவ குணம் உடையவை. அகத்தி மரத்தின் பட்டையை இடித்து தண்ணீருடன் கலந்து காய்ச்சி குடிக்க விஷக் காய்ச்சல் குணமாகும். அகத்தி இலையை சாறு பிழிந்து செந்தூரங்கள் செய்ய பயன்படுத்துகின்றன. இதனை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சி அடையும். இதன் சுவை கொஞ்சம் கசப்பாக இருக்கும்.

தவசி முருங்கை:  இதன் இலைச்சாற்றை சாப்பிடுவதன் மூலம் மூக்கில் நீர் வடிதல் ,இருமல் , இளைப்பு போன்றவை குணமாகும். தவசி முருங்கை சாற்றுடன் சிறிது உப்பு, மிளகு, மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிற்று உப்பிசம் உடனே குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரை:  இந்தக் கீரை சமைத்து உண்பதை விட மருத்துவ பொருளாக நன்கு பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளித்தொல்லையை போக்க இந்த இலை சாற்றுடன் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுக்க குணமாகும். நோய்கள் வராமல் தடுப்பதற்கு இந்தக் கீரையை சமைத்தோ அல்லது சாறு எடுத்து குடிப்பதோ மிகவும் நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *