வாழ்க்கை முறை

வாழ்வை வளமாக்கும் வாழ்வியல் ரகசியங்கள் !

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.  உங்கள் வாழ்வின்  இனிய தருணங்களை நினைத்து மகிழுங்கள். 

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். இது தியானம் போன்று உங்களுக்குள் புத்துணர்ச்சி ஊட்டும்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறக்கம் தேவை உடல் மனம் ஆரோக்கியம் காக்கப்பட இது உதவும். 

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே அடிப்படை பலம் அவை உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும், எப்பொழுது எதற்கும் தயாராக்கும். 

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள். மனசை ரீலாக்ஸ் செய்யுங்கள். 

6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள். ஆற்றல் பெருகும். சிந்தித்து செயலாற்ற வைக்கும்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உங்களை தினமும் புதிதாய் இந்த உலகுக்கு காட்டும். 

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள். உண்மையும், உற்சாகமும் அவர்களிடம் அதிகம் இருக்கும். 

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது! அது இலக்குகளை நோக்கி உங்களை ஓட வைக்கும். 

10. மரங்களிலும், செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள். உடலை ஆரோக்கியமாகவும், அழகாக வைக்கும். 

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள். மகிழ்ச்சி உங்களுடனே என்றும் பயணிக்கும். 

12. தினமும் தண்ணீர் அருந்துங்கள். தாகத்தின் பொழுது மெதுவாக நீரை உறிஞ்சு குடிக்கவும். 

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள், அதனை  வாழ்வனைத்தும் உங்களோடு பயணிக்கச் செய்யுங்கள். 

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள். வேண்டியதை கேளுங்கள் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள். நன்றியுடன் வாழ்வை பயணியுங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள். இல்லையெனில் பசியெடுத்தால் மட்டும் சாப்பிடவும்.  ஒருவேளை நீங்கள் சாப்பிட்டாலும் எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம் ஆனால் பசி எடுத்து சாப்பிட வேண்டும் உணவு பொருட்களை மெண்ணு சாப்பிட வேண்டும். 

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள். வாழ்வை வசப்படுத்துங்கள். 

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள், வலிமையாக இருக்க அன்பு உதவும்.

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்ளுங்கள். எளிமையான வாழ்க்கை எஃகு போல் உறுதி கொடுக்கும். 

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். அமைதியுடன் இருங்கள். 

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள். வாழ்வில் எளிதாக எதையும் பெறலாம்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். நல்லதை செய்யுங்கள், நன்மையை ஆராயுங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.

30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் ‘உன்னதம்’ என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை ‘பிஸி’யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் ‘ஆன்மா’ எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *