சினிமாசினிமா பாடல்கள்

தொடு வானம் தொடுகின்ற… அனேகன் படம்

அனேகன் இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் தனுஷ், கார்த்தி, அமைரா தாஸ்தூர் ஆகியோர் நடித்துள்ளனர் இதில் தனுஷ் 3வேடங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகும்.

தொடு வானம் தொழுகின்ற நேரம் 
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் 
தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம் 
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் 

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே 
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ 
இலை மேலே பனித்துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம் 
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே 

மேலும் படிக்க : என்ன நினைச்ச நீ… சொக்கத்தங்கம்

வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது 
அது வாழ்வினும் கொடிது 
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் 
வான் நீளத்தில் எனை புதைகிறேன் 
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது 
அது வாழ்வினும் கொடிது 
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் 
வான் நீளத்தில் எ னை புதைகிறேன் 

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே 
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ 
இலை மேலே பனி துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம் 
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே 

காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே 
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை 
வாழ்வே வலிக்கிறதே 
காட்டில் தொலைந்த மழை துளி போல் 
கண்ணே நீயும் தொலைந்ததென்ன 
நீரினை தேடும் வேரினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன் 
கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே 
மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே
சிறுபொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறி விட்டாய் 
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயா நீ

மேலும் படிக்க : மகளிர் தினத்தில் பெண்ணை அவமானப்படுத்தும் 90 எம்எல் சினிமா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *