செய்திகள்தமிழகம்

நெல்லை அதிக விலை கொடுத்து வாங்கும் நிறுவனம்

விவசாயிகளிடமிருந்து அதிக விலை கொடுத்து நெல்லை கர்நாடகாவில் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம் கொள்முதல் செய்துள்ளன. இவற்றிற்கு போட்டி அதிகரித்து உள்ள நிலையில் தங்கள் விளைபொருளுக்கு வியாபாரிகளிடம் அதிக விலை கேட்கும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக 2000 ரூபாய்க்கு ஒரு குவின்டால் நெல்லை கொள்முதல் செய்துள்ளன. குறைந்தபட்ச அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலைகளை விட 4 சதவீதம் அதிகமாக உள்ளன.

வியாபாரிகளிடம் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக விலை கோர விவசாயிகள் தொடங்கி விட்டனர். இதனைத் தொடர்ந்து அதிக விலை கொடுத்து வாங்க விளைபொருட்களுக்கு போட்டி ஏற்பட்டது. இவற்றை அரசியல் தலைவர்கள் எதிர்ப்பாக தனியார் நிறுவனங்களும், அரசும் கையாளுகின்ற தந்திரம் என தெரிவித்துள்ளனர்.

விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அதிக விலை பொருட்களுக்கு எங்கு கிடைக்கிறதோ அங்கு விற்பதில் தவறு ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கை புதிய வேளாண் சட்டத்தால் ஓங்கி விடும் என அச்சங்கள் இச்செய்தி மூலம் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *